சனிக்கிழமை, ஜூலை 27, 2024
சனிக்கிழமை, ஜூலை 27, 2024

HomeFact Checkதமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

Fact: வைரலாகும் இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று புதிய தலைமுறை என்று உறுதி செய்துள்ளது.


“தமிழ்நாட்டு மக்கள் எங்களை 40 தொகுதிகளிலும் தோற்கடித்ததால்தான் இந்த பட்ஜெட்டில் நாங்கள்
அவர்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. எங்களுக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கு நாங்கள் ஏன்
நிதி ஒதுக்க வேண்டும்?”
என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாக நியூஸ்கார்டு ஒன்று
சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதாக பரவும் தகவல்

X Link | Archive Link

தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதாக பரவும் தகவல்

Facebook Link

தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதாக பரவும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினாரா?

Fact Check/Verification

தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேள்வியெழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுட்டுள்ள ஜூலை 24 ஆம் தேதியில் வைரலாகும் நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டிருக்கவில்லை.

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என தெளிவு செய்தார்.

தொடர்ந்து தேடியதில் புதிய தலைமுறை இணையத்தளத்திலும் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று மறுப்பு தெரிவித்திருப்பதை காண முடிந்தது.

தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதாக பரவும் தகவல்

இதனையடுத்து தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை 40 தொகுதிகளிலும் தோற்கடித்ததால் அவர்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா என்பது குறித்து தேடினோம்.

இத்தேடலில் அவர் இவ்வாறு பேசியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. மாறாக மத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை என்றுநிர்மலா சீதாராமன் பேசியதாக ஜீ தமிழ் நியூஸ் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில் சன்சத் டிவி யூடியூப் பககத்தில் நிர்மலா சீதாராமனின் இந்த மேற்கண்ட உரை இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

Also Read: கேரளாவில் இந்து கோயிலை முஸ்லீம்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தவறான வீடியோ!

Conclusion

தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேள்வியெழுப்பியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from Zee News Tamil, Dated July 24, 2024
Youtube Video from Sansad TV
, Dated July 24, 2024
Report fom Puthiya Thalaimurai
Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular