வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkஒடிசா ரயில் விபத்து ஒரு சிறு விவகாரம்; அதை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று அண்ணாமலை கூறினாரா?

ஒடிசா ரயில் விபத்து ஒரு சிறு விவகாரம்; அதை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று அண்ணாமலை கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஒடிசா ரயில் விபத்து ஒரு சிறு விவகாரம்; அதை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று அண்ணாமலை கூறினார்.

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

“இரயில், விமானம், கார் பயணம் எதுவென்றாலும் விபத்துகள் நடக்கத்தான் செய்யும். மரணம் அடைந்தவர்களுக்குதான் 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறதே. இன்னமும் இந்த சிறு விவகாரத்தை ஏன் ஊதி பெரிதாக்குகிறீர்கள்? மோடிஜி என்ன கடவுளா விபத்தை நினைத்த மாத்திரத்தில் தடுத்து நிறுத்த?” என்று தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

ஒடிசா ரயில் விபத்து ஒரு சிறு விவகாரம்; அதை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்
Screenshot from Twitter@KovaiHarish

Twitter Link|Archived Link

ஒடிசா ரயில் விபத்தை சிறு விவகாரம் என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்
Screenshot from Facebook/seetha.saravanan.50

Archived Link

ஒடிசா ரயில் விபத்தை சிறு விவகாரம் என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்
Screenshot from Facebook/revathy.alagarsamy

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

Fact Check/Verification

ஒடிசா ரயில் விபத்து ஒரு சிறு விவகாரம்; அதை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள தேதி (05/06/2023) மற்றும் நேரத்தில் (12:30 PM) இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை. மாறாக அரசு மதுக்கடைகளில் ஏற்படும் உயிர்பலியை தடுக்க வேண்டும் என்று அண்ணாமலை பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தது.

இதை தவிர்த்து வேறு எந்த நியூஸ்கார்டையும் அண்ணாமலை குறித்து நேற்று புதிய தலைமுறை வெளியிட்டிருக்கவில்லை.   

இதனையடுத்து  புதிய தலைமுறையின்  டிஜிட்டல் தலைவர்  இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்தோம். இதற்கு வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டில் இருக்கும் தகவல் குறித்து விசாரிக்கையில், இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்று பதிலளித்தார்.

Also Read: தவறானவர்களின் கையில் செங்கோல் கொடுக்கப்பட்டதன் நிமித்த செய்தியே ஒடிசா ரயில் விபத்து என்று திருவாவடுதுறை ஆதினம் கூறினாரா?

Conclusion

ஒடிசா ரயில் விபத்து ஒரு சிறு விவகாரம்; அதை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation With Ivani, Digital Head, Puthiya Thalaimurai, Dated June 06, 2023

Phone Conversation With SG Surya, BJP State Secretary, Dated June 06, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular