Claim: “பேருந்துகள் நாசமாய் இருக்க, கார் ரேஸ் விட்டால் வளர்ச்சியா?” என்று பரவும் உடைந்த அரசு பேருந்து படம்!
Fact: வைரலாகும் படம் 2018 ஆம் ஆண்டிலேயே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இப்படம் பழைய படமாகும். இப்பேருந்து தற்போது பயன்பாட்டில் இல்லை.
சென்னையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை இரண்டு நாட்களுக்கு ஃபார்முலா 1 கார் பந்தயம் நடைப்பெற்று முடிந்துள்ளது. இந்த கார் பந்தயம் குறித்து சமூக ஊடகங்களில் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், “ மக்கள் பயன்படுத்தும் பேருந்துகள் நாசமா போய் இருக்கு …. கார் ரேஸ் விட்டால் வளர்ச்சி என்று உருட்டிட்டு இருக்கீங்களே கொத்தடிமைகளா வெக்கமா இல்ல….” என்று குறிப்பிட்டு கயிறால் கட்டப்பட்ட உடைந்த அரசு பேருந்தின் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இஸ்ரேலிய போலீஸ் அதிகாரி பாலஸ்தீனிய சிறுவனை கழுத்தை நெரித்து கொன்றாரா?
Fact Check/Verification
“பேருந்துகள் நாசமாய் இருக்க, கார் ரேஸ் விட்டால் வளர்ச்சியா?” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று வைரலான நிலையில் அப்படத்தை ரிவர்ச் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் ரிலாக்ஸ் பிளீஸ் எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூலை 05, 2018 அன்று வைரலாகும் இதே படம் பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இதனையடுத்து வைரலாகும் வீடியோவில் காணப்படும் TN74 N1243 எனும் பதிவெண்ணையுடைய பேருந்து குறித்து மத்திய அரசின் NextGen mparivahan செயலியின் வழியாக ஆராய்கையில் இப்பேருந்து தற்சமயம் பயன்பாட்டிலேயே இல்லை என அறிய முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் வைரலாகும் படத்தில் காணப்படும் பேருந்தின் சேவையானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே நிறுத்தப்பட்டது என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவின் வழியாக அறிய முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் 2019 ஆம் ஆண்டே சேவை நிறுத்தப்பட்ட பேருந்தின் படத்தை வைத்து தமிழக அரசு பேருந்துகள் தரமற்று இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது என அறிய முடிகின்றது.
Also Read: அமெரிக்க டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் இடம்பெற்ற முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
“பேருந்துகள் நாசமாய் இருக்க, கார் ரேஸ் விட்டால் வளர்ச்சியா?” என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில பரப்பப்படும் புகைப்படமானது பழைய படமாகும். அப்படத்தில் காணப்படும் பேருந்தின் சேவையானது 2019 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டுவிட்டது.இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
Facebook post from the user, relaxplzztamil, Dated July 05, 2018
X post from TN Fact Check, Dated August 26, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)