Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: ஈரோட்டில் துணை சபாநாயகர் பிச்சாண்டியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Fact: இச்சம்பவம் 2024 ஏப்ரலில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகாவிற்குட்பட்ட செல்லங்குப்பம் கிராமத்தில் நடந்ததாகும். இச்சம்பவத்திற்கும் ஈரோடு இடைத்தேர்தலுக்கும் தொடர்பில்லை.
வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ஈரோட்டில் வாக்கு சேகரிக்கச் சென்ற துணை சபாநாயகர் பிச்சாண்டியை பொதுமக்கள் கேள்வி கேட்டு விரட்டியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கோவையில் கார் கண்ணாடி உடைத்து பேக் திருடப்பட்டதாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை!
ஈரோட்டில் துணை சபாநாயகர் பிச்சாண்டியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் ‘துணை சபாநாயகரை கேள்வி மேல் கேள்வி கேட்ட மக்கள்’ என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ குறித்து தினமலரில் ஏப்ரல் 06, 2024 அன்று செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியில் இச்சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகாவிற்குட்பட்ட செல்லங்குப்பம் கிராமத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் ஈடிவி பாரத் ஊடகத்திலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஏப்ரல் 06, 2024 அன்று கீழ்பென்னாத்தூர் தாலுகாவிற்குட்பட்ட செல்லங்குப்பம் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்கச் சென்றபோது பொதுமக்கள் அவர் காரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனையடுத்து பிச்சாண்டி அப்பகுதியில் வாக்கு சேகரிக்காமல் சென்றதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவத்திற்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கும் தொடர்பில்லை என்பதும் தெளிவாகின்றது.
Also Read: கர்ணபிரயாக் – ரிஷிகேஷுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதா?
ஈரோட்டில் துணை சபாநாயகர் பிச்சாண்டியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.
உண்மையில் வீடியோவில் காணப்படும் சம்பவம் 2024 ஏப்ரலில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகாவிற்குட்பட்ட செல்லங்குப்பம் கிராமத்தில் நடந்ததாகும். இச்சம்பவத்திற்கும் ஈரோடு இடைத்தேர்தலுக்கும் தொடர்பில்லை.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report by Dinamalar, Dated April 06, 2023
Report by ETV Bharat, Dated April 06, 2023
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Ramkumar Kaliamurthy
February 10, 2025
Ramkumar Kaliamurthy
January 29, 2025
Ramkumar Kaliamurthy
March 1, 2023