Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
எஸ்.சி, எஸ்.டி உள்பட எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு அவசியம் இல்லை - பிரேமலதா விஜயகாந்த்
வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
எஸ்.சி, எஸ்.டி உள்பட எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு அவசியம் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“இவர் மட்டுமல்ல , இவரது கணவர் விஜயகாந்தும் இது போன்ற அடிப்படை புரிதலற்ற தட்டையான நிலைப்பாடுகள் கொண்டவர் தான் . அவர் நல்லவர் , சோறுபோட்டார் என்பதெல்லாம் அரசியல் தலைவருக்கு தகுதியாகிவிடாது .” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘பழைய இந்தியா பிரதமரும் பழைய சீனா அதிபரும்’ என்று பரவும் வீடியோவின் உண்மை பின்னணி!
எஸ்.சி, எஸ்.டி உள்பட எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு அவசியம் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் சன் நியூஸ் வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தபோது அதில், “இந்திய மக்கள் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள் என கருதுவதால் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை.- பிரேமலதா” என்றே நியூஸ்கார்ட் இடம்பெற்றிருந்தது.
ஆனால், வைரலாகும் நியூஸ்கார்டில் இடைச்செருகலாக எஸ்.சி, எஸ்.டி என்று சாதிகளைக் குறிப்பிட்டு பிரேமலதா கருத்து கூறியதாக எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது நமக்கு உறுதியாகியது.


மேலும், அவருடைய பேட்டியிலும் அவர் எஸ்.சி, எஸ்.டி குறித்து பேசியிருக்கவில்லை என்பதும் நமக்கு புதியதலைமுறை வெளியிட்டிருந்த அவரது பேட்டி வீடியோவின் மூலமாக உறுதியாகியது.
Also Read: பிரதமர் மோடியை வழியனுப்பும் ரஷ்ய அதிபர் புதின் என்று பரவும் வீடியோ எஸ்சிஓ மாநாட்டில் எடுக்கப்பட்டதா?
எஸ்.சி, எஸ்.டி உள்பட எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு அவசியம் இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post by, Sun News Tamil, Dated September 6, 2025
YouTube Video From, Puthiyathalaimurai, Dated September 05, 2025