Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: ராஜஸ்தானில் பட்டப்பகலில் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி
Fact: இத்தகவல் தவறானதாகும். குடும்பப்பிரச்சினையில் அச்சிறுமி கடத்தப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானில் பட்டப்பகலில் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
”நேற்று பிஜேபி ராஜஸ்தான் ஆட்சியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆறு பேர் கடத்தி சென்று கற்பழித்துள்ளனர்!
வாழ்க்கை தொடங்கும் பருவத்தில், அவள் வாழ்க்கை முடிந்துவிட்டது!” என்று இந்த வீடியோ பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது பலருக்கு உடன்பாடில்லை என்றாரா திருச்சி சிவா?
ராஜஸ்தானில் பட்டப்பகலில் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-வேர்டுகளைக் கொண்டு தேடியபோது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 25, 2024 அன்று வெளியிட்டிருந்த செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், வைரல் வீடியோவின் ஒரு காட்சி புகைப்படமாக வெளியாகியிருந்தது. அதில், ராஜஸ்தான் மாநிலம், தீக் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அச்செய்தியில், கடந்த டிசம்பர் 23ஆம் தேதியன்று 10வகுப்பு மாணவியான சிறுமி ஒருவரை தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்குச் சென்றபோது வலுக்கட்டாயமாக சிலர் கடத்தி சென்றுள்ளனர். மேலும், தடுக்க முயற்சித்தவர்களை துப்பாக்கியால் சுட்டு பயமுறுத்திய காட்சியும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. ஆதா – சாதா என்னும் (பெண் கொடுத்து பெண் எடுக்கும் வழக்கம்) சமூக பழக்க வழக்கம் ஒன்றின்படி கடந்த ஆண்டு இச்சிறுமிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
14 வயதில் திருமணம் ஆகிய அச்சிறுமிக்கு தற்போது 15 வயதாகியுள்ள நிலையில் வரதட்சணை கொடுமையால் அவர் திருமணமான சில நாட்களிலேயே தனது பிறந்த வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கிருந்து படிப்பை தொடர்ந்த சிறுமியை கணவன் வீட்டினர் கடத்தியுள்ளனர் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி விவரித்துள்ளது. இதுகுறித்து அச்சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், அவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக எந்த செய்தியிலும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறு, குடும்பத்திற்குள் நடைபெற்ற பிரச்சினையே தவறான வழியில் தகவலுடன் பரப்பப்படுகிறது.
18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்களுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டபடி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: மண்டபத்தில் செட் போட்டு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக பொய்யுரைத்தாரா ஸ்டாலின்?
ராஜஸ்தானில் பட்டப்பகலில் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
News Report From, TNIE, Dated December 25, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 29, 2024
Vijayalakshmi Balasubramaniyan
February 6, 2024
Vijayalakshmi Balasubramaniyan
March 24, 2023