Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் தமிழக அரசியலில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஐந்து பொய் செய்திகளை கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

எச்.ராஜா பாஜகவிலிருந்து விலகாதவரை தமிழகத்தில் தாமரை மலர்வது கடினம் என்று எல்.முருகன் கூறியதாக வதந்தி
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் எச்.ராஜா பாஜகவிலிருந்து விலகாதவரை தமிழகத்தில் தாமரை மலர்வது கடினம் என்று கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் உலவி வருகிறது. ஆனால் அது தவறானத் தகவலாகும்.

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயர் திருடப்பட்டது என்று வதந்தி
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயரும் உதய சூரியன் எனும் சின்னமும் பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து திருடியதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் அது தவறானத் தகவலாகும்.

முஸ்லிம் இளைஞர்களால் காவலதிகாரித் தாக்கப்பட்டதாக வதந்தி
சென்னை திருவெல்லிக்கேணியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள் துணை ஆய்வாளர் அகிலன் என்பவரை தாக்கியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. ஆனால் அது பொய்யானத் தகவலாகும்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதற்காக இளைஞர் கொல்லப்பட்டதாக வதந்தி
இராமநாதபுரத்தில் அருண் பிரகாஷ் எனும் இளைஞர் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடியதால் முஸ்லிம் மதவாதிகளால் கொல்லப்பட்டார் எனும் செய்தி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.ஆனால் இது பொய்யானத் தகவலாகும்.

சகாயம் ஐஏஎஸ் லயோலாக் கல்லூரி ஓவியக் கண்காட்சியைத் துவக்கி வைத்ததாக வதந்தி
லயோலாக் கல்லூரியில் நடைப்பெற்ற சர்ச்சையான ஒவியக் கண்காட்சியை சகாயம் ஐஏஎஸ் துவக்கி வைத்ததாக பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இது தவறானக் குற்றச்சாட்டாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)