Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: கேரளாவில் ஆர்எஸ்எஸ் பெண் முஸ்லீம்களால் கொல்லப்பட்டார்
Fact: கௌரி லங்கேஷ் மரணம் குறித்து நடிக்கப்பட்ட வீதி நாடகம்
கேரளாவில் ஆர்எஸ்எஸ் பெண் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கேரளாவில் ஆர்எஸ்எஸ் பெண் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை பல்வேறு கீ ஃபிரேம்களாக பிரித்து, ரிவர்ஸ் சர்ச் முறையை பயன்படுத்தி வைரலாகும் வீடியோ குறித்து ஆராய்ந்தோம்.
இதில் DYFI களிக்காவு எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் செப்டம்பர் 08, 2017 அன்று வைரலாகும் இந்த வீடியோவின் முழுப்பகுதி பதிவிடப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.
“இவர்கள் களிக்காவு DYFI செயற்பாட்டாளர்கள். இது ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான ஒரு முக்கிய செயல்பாடு. ஆர்எஸ்எஸ்-ஆல் சுட்டுக் கொல்லப்பட்ட கௌரி லங்கேஷின் மரணம் குறித்து கேள்வி கேட்கும் ஜனநாயக விசாரணை இந்த தெருநாடகம்” என்று குறிப்பிட்டு இந்த வீடியோவானது பதிவிடப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக நடத்தப்பட்ட தெரு நாடகத்தின் ஒரு பகுதியை வெட்டி, ஆர்ஆர்எஸ் பெண் முஸ்லீம்களால் கொலை செய்யப்பட்டதாக பொய்யான ஒரு தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகின்றது.
இந்த பொய் தகவலானது 2017 ஆம் ஆண்டே சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, இந்த வீடியோ தெருநாடகத்தின் ஒரு பகுதி என்று விளக்கி நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளதை நம்மால் காண முடிந்தது. இச்செய்தியானது செப்டம்பர் 13, 2017 அன்று வெளியாகியுள்ளது.
தொடர்ந்து தேடுகையில் கேரள அமைச்சரான எம்.பி.ராஜேஷ் செப்டம்பர் 12, 2017 அன்று இந்த பொய் செய்தியை வெளியிட்ட ஜீ நியூஸ் நிறுவனத்தை சாடி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
“கௌரி லங்கேஷ் கொலை DYFI நடத்திய வீதி நாடகத்தை திரித்து, ஆர்எஸ்எஸ் பெண் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக பொய்யான ஒரு தகவலை ஜீ நியூஸ் வெளியிட்டுள்ளது. இதுதான் ஊடக நடத்தும் முறையா? கையும் களவுமாக பிடித்தப்பின் இந்த செய்தி நீக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து மன்னிப்பு ஏதும் கேட்கப்படவில்லை” என்று அப்பதிவில் ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.
Also Read: சென்னையில் நடந்த அதிமுக பேரணியில் வடமாநிலத்தவர் பங்கேற்றதாக பரவும் பழைய படம்!
கேரளாவில் ஆர்எஸ்எஸ் பெண் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
News report by News 18 on September 13, 2017
Facebook Post by DYFI Kalikavu on September 8, 2017
Facebook post by MB Rajesh on September 12,2017
இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் மலையாளத்தில் பிரசுரமாகியுள்ளது.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)