செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23, 2024

HomeFact Checkமாரிதாஸ் வழக்கில் ஆஜராகிறாரா சுப்ரமணியன் சுவாமி?

மாரிதாஸ் வழக்கில் ஆஜராகிறாரா சுப்ரமணியன் சுவாமி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

யூடிபர் மாரிதாஸ் வழக்கில் சுப்ரமணியன் சுவாமி ஆஜராகவிருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மாரிதாஸ் வழக்கில் சுப்ரமணியன் சுவாமி ஆஜராகவிருப்பதாக வைரலாகும் தகவல்

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி, தமிழக அரசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக மதுரை நகரக் காவல்துறை மாரிதாஸை கைது செய்தது. இவ்வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை இவ்வழக்கை ரத்து செய்தது.

இதனைத் தொடர்ந்து தப்லீக் ஜமாத் குறித்து அவதூறு பரப்பிதாகக் கூறி  மாரிதாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மீண்டும் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மாரிதாஸ் வழக்கில் பாஜக நாடாளுமன்ற சட்ட மேலவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி ஆஜராகவிருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மாரிதாஸ் வழக்கில் சுப்ரமணியன் சுவாமி ஆஜராகவிருப்பதாக வைரலாகும் தகவல் - 1

Twitter Link | Archive Link

மாரிதாஸ் வழக்கில் சுப்ரமணியன் சுவாமி ஆஜராகவிருப்பதாக வைரலாகும் தகவல் - 2

Facebook Link

மாரிதாஸ் வழக்கில் சுப்ரமணியன் சுவாமி ஆஜராகவிருப்பதாக வைரலாகும் தகவல் - 3

Facebook Link

Also Read: ராஜவேல் நாகராஜன் சாட்டை துரைமுருகனை பிணையில் எடுக்க நிதி கேட்டாரா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

மாரிதாஸ் வழக்கில் சுப்ரமணியன் சுவாமி ஆஜராகவிருப்பதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். அந்த ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது எனும் உண்மை நமக்கு தெரிய வந்தது.

சுப்ரமணியன் சுவாமி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வைரலாகும் இத்தகவலை மறுத்து பதிவு போன்றை பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில்,

“இதுவரை யாரும் என்னிடம் இதுக்குறித்து பேசவில்லை. ஊடகம் இதுக்குறித்து என்னிடம் கேட்டபோது மாரிதாஸ் என்னை நேரிடையாக தொடர்புக் கொண்டால் இதுக்குறித்து யோசிப்பேன் என்று கூறினேன்.

அதேசமயம் மாரிதாஸ் குருமூர்த்திடன் உள்ளார். அவர் வழக்கில் என்னுடைய குறுக்கீடு அவசியம் இருக்காது என்றும் கூறியுள்ளேன்.”

என்று சுப்ரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.

விளக்கம்

Twitter Link | Archive Link

Archive Link: மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்றாரா அன்பில் மகேஷ்?

Conclusion

மாரிதாஸ் வழக்கில் சுப்ரமணியன் சுவாமி ஆஜராகவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Subramanian Swamy Twitter Handle


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular