Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் உள்ள மதரஸாவில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
Fact: வைரலாகும் புகைப்படம் பஞ்சாப்பில் உள்ள கத்தி தொழிற்சாலை ஒன்றில் எடுக்கப்பட்டதாகும்.
உத்திரபிரதேச மதரஸா ஒன்றில் கைப்பற்றப்பட்ட ஏராளமான ஆயுதங்கள் என்று புகைப்பட்டம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் உள்ள மதரஸாவில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்! 6 மௌலவிகள் கைது! எல்எம்ஜி இயந்திரத் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதுதான் கவலைக்குரிய விஷயம்! ஒரு நிமிடத்தில் 8000 ரவுண்டுகள் சுடும் இயந்திர துப்பாக்கிகள்!உங்களின் எதிர்காலத்தை இவர்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
உத்திரபிரதேச மதரஸாவில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் குவியல் என்று பரவும் புகைப்படச்செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அப்புகைப்படம் உண்மையில் பஞ்சாப் கத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு உறுதியாகியது.
ஏற்கனவே, கேரள ஆயுதங்கள் என்று இப்புகைப்படம் பரவிய நிலையில் அதுகுறித்து செய்தி வெளியிட்ட இந்தியா டுடே, இந்த ஆலையின் உரிமையாளர் பச்சன் சிங் என்பவரிடம் பேசி, மேலும் இந்த ஆலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வேறு சிலவற்றைப் பகிர்ந்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில் மதரஸா ஒன்றில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தாலும், அதற்கும் இப்புகைப்படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிறது. குறிப்பிட்ட சம்பவம் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்தே இந்த வைரல் புகைப்படம் பல்வேறு போலி செய்திகளுடன் பரவுவது குறிப்பிடத்தக்கது.
Also Read: ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று நியூஸ்கார்ட் வெளியிட்டதா புதியதலைமுறை?
உத்திரபிரதேச மதரஸாவில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் குவியல் என்று பரவும் புகைப்படச்செய்தி போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from India Today, Dated July 11, 2019
Report from India Today, Dated July 25, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)