இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

காலிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டாரா திருமாவளவன்?
காலிஸ்தான் ஜிந்தாபாத் என்று டெல்லியில் தமிழக எம்.பி தொல்.திருமாவளவன் கோஷமிட்டதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

வேலூரில் சசிகலாவை வரவேற்க குவிந்திருந்த தொண்டர்கள் கூட்டமா இது?
வேலூரில் சசிகலா நடராஜனை வரவேற்கக் காத்திருந்த தொண்டர்கள் கூட்டம் என்று பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.

சூரியனின் மேற்பரப்பின் தெளிவான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளதா?
சூரியனின் மேற்பரப்பில் மிகத்துல்லியமான புகைப்படங்களை நாசா ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளதாகப் பரவும் புகைப்படங்கள் தவறானதாகும்.

குருமூர்த்தி சசிகலா பற்றி மோசமாக பேசினாரா?
குருமூர்த்தி சசிகலா அவர்களை ‘சாக்கடை நீர்’ என்று குறிப்பிட்டதாக பரவும் செய்தி தவறானதாகும்.

சி.வி.சண்முகம் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து தவறாகப் பேசினாரா?
சி.வி.சண்முகம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாகப் பேசியதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)