Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் இந்திய அரசியலில் கட்டவிழ்த்து விடப்பட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

அடல் சுரங்கப்பாதைத் திறப்பு விழாவில், இத்திட்டத்தை வாஜ்பாய் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார் என்று மோடி என்று பேசியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளன.ஆனால் இது தவறானச் செய்தியாகும்.

ஊடகங்கங்களில் அடல் சுரங்கப்பாதை என்று ஒரு படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது தவறானப் படமாகும்.

நரேந்திர மோடி அவர்கள் மக்கள் வரிப்பணத்தில் தனக்கென்று சொகுசு தனிவிமானம் வாங்கியதாக ஜோதிமணி அவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆனால் இது தவறானக் குற்றச்சாட்டாகும்.

உத்திரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தப் பெண் தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது தவறானக் குற்றச்சாட்டாகும்.

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவர் திக்விஜய் சிங். இவரின் மகள் பாஜகவில் இணைந்ததாக செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஆனால் இது தவறானத் தகவலாகும்
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)