Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
போலி ஈமெயில் தொடர்பாக, நியூஸ் 18 ஆசிரியர் வினய் சராவகி கொடுத்தப் புகாரின் அடிப்படையில் ஊடகவியலாளர் மாரிதாஸ் மீது மோசடி உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
தமிழக அரசியலில் தற்போது பரப்பரப்பாகப் பேசப்படுபவர் ஊடகவியலாளர் மாரிதாஸ். இவர் திராவிட அரசியலுக்கு எதிராகத் தொடர்ந்துப் பேசி வருகிறார்.
இவர் நியூஸ் 18 சேனல் மீது அடுக்கடுக்காக பலக் குற்றச்சாட்டுகளை வைத்தார். இவரின் குற்றச்சாட்டுகளை ஆமோதிக்கும் விதமாக நியூஸ் 18 சேனலின் ஆசிரியரான வினய் சராவகியிடமிருந்து தனக்கு மின்னஞ்சல் வந்ததாகக் கூறி அதையும் வெளிக்காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஆனால் வினய் சராவகி, தன் பெயரில் வந்ததாகக் கூறப்படும் மின்னஞ்சலைத் தான் அனுப்பவில்லை என்றும், அதும் முற்றிலும் பொய்யான செய்தி என்றும் அதை மறுத்தார்.
மேலும் இதுக்குறித்து, நியூஸ் 18 சேனல் நிர்வாகம் சட்டப்படி புகார் அளிக்கும் என்று தெரிவித்தது. இதனடிப்படையில் வினய், மாரிதாஸ் மீது புகாரளித்தார்.
இதனையடுத்து இதை விசாரித்த காவல்துறையினர் மாரிதாஸுக்கு எதிராக 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது என்று பலத் தரப்பிலிருந்து செய்தி வந்தது.
மாலை முரசு இணையத் தளம் இதைச் செய்தியாக வெளியிட்டிருந்தது.

இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் சார்பில் இதை ஆராய முனைந்தோம்.
நாம் இதுக்குறித்து விசாரித்தபோது இதன் உண்மைகள் தெரிய வந்தது.
மாரிதாஸ் மீது வினய் புகாரளித்தது உண்மையே. ஆனால் அவர் மீது காவல்துறையினர் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. மாறாக மாரிதாஸுக்கு மின்னஞ்சல் அனுப்பிய முகம் தெரியாத நபர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் சமூக ஊடங்கங்களில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையில் செய்திகளும் படங்களும் பரப்பினால் மட்டுமே அது தண்டனைக்குரியக் குற்றம். மற்றப்படி, மாரிதாஸ் வீடியோ வெளியிட்டதற்காக அவர்மீது வழக்குத் தொடர முடியாது என்றும் அவ்வாறு செய்தால், அது பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக மாறும் என்றும் காவல்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பாக டாப் தமிழ் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

நம் விரிவான விசாரணைக்குப்பின் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வந்தச் செய்தியானது முற்றிலும் பொய்யானது என்று நமக்குத் தெளிவாகிறது.
Facebook Page: https://facebook.com/ithellamthavarunga/posts/201280294859467
Top Tamil News: https://www.toptamilnews.com/no-case-against-maridas-action-against-the-sender-of-the-fake-e-mail-chennai-cyber-crime-police/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 14, 2024
Vijayalakshmi Balasubramaniyan
April 24, 2024
Vijayalakshmi Balasubramaniyan
December 1, 2023