மதுக்கடைகள் எதையும் திறக்காதே தமிழக அரசே என்று பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் கையில் போஸ்டருடன் போராட்டம் நடத்திய புகைப்படத்தில் போஸ்டரில் அமைந்துள்ள எழுத்துப்பிழையுடன் கூடிய வாசகங்கள் போட்டோஷாப் செய்து உருவாக்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானதாகும்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.