கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பை அம்மாநில அரசு தடை செய்துள்ளது என்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கேரள மாநிலத்தில் கடந்த வாரம், பெரிங்கரா பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் சந்தீப் குமார் என்பவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். அவருடைய கொலையில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், “கேரளாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்து மாநில அரசு உத்தரவு !” என்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஐந்தாயிரம் ரூபாயில் 2,500 கழிந்தால் 1500 என்றாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?
Fact check/ Verification
கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைரலாகும் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
தேசிய அளவில் பிரபலமான ஒரு இயக்கத்திற்கு மாநில அரசு ஒன்று தடை விதித்திருந்தால் அது மிகப்பெரிய செய்தியாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும். ஆனால், எந்தவொரு முன்னணி ஊடகத்தில் கேரளத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகவில்லை.
தொடர்ந்து, இதுகுறித்த செய்திகள் ஏதேனும் வெளியாகி இருக்கின்றதா என்று தேடியபோது, கடந்த ஏப்ரல் மாதம், திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரளத்தில் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆர் எஸ் எஸ் அமைப்பு சார்ந்த உறுப்பினர்களின் அணிவகுப்புகள், மற்றும் ஆயுதப்பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், கேரள மாநில அரசு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதித்துள்ளதாக எந்த அறிவிப்பும் சமீபத்தில் இடம்பெறவில்லை. எனவே, இதுவரை ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு கேரள மாநில அரசு தடை விதிக்கவில்லை என்பது உறுதியாகிறது.
Conclusion:
கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைரலாகும் செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)