Tuesday, March 25, 2025

Politics

கடல்நீரை விவசாயத்திற்கு திருப்பி விடுவேன் என்றாரா ராஜேந்திர பாலாஜி?

Written By Ramkumar Kaliamurthy
Mar 18, 2021
banner_image

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பயன்பெற கடல்நீரை திருப்பி விடுவேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் கூறியதாக கூறி புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கடல்நீரை விவசாயத்திற்கு திருப்பி விடுவேன் என்று அமைச்சர் கூறியதாக பரப்பப்படும் புகைப்படச் செய்தி
Source: Facebook

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களமே மிகவும் பரப்பரப்பாக காணப்படுகின்றது. இம்முறை எப்படியாவது அதிகாரத்தை பெற்று வேண்டும் என்று ஒவ்வொரு வேட்பாளர்களும் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

இவ்வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களும் தான் போட்டியிடவிருக்கும் ராஜபாளையம் தொகுதியில் பல வாக்குறுதிகளை அளித்து வருகின்றார்.

அதில் ஒன்றாக, “வீணாக கிடக்கும்  கடல்நீரை திருப்பி விட்டு, ராஜபாளையம் உட்பட விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுப்பேன்” என்கிற வாக்குறுதியையும் ராஜேந்திர பாலாஜி அவர்கள் கூறியதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கடல்நீரை விவசாயத்திற்கு திருப்பி விடுவேன் என்று அமைச்சர் கூறியதாக பரப்பப்படும் பதிவு -1
Source: Facebook

Archive Link: https://archive.ph/6td15

கடல்நீரை விவசாயத்திற்கு திருப்பி விடுவேன் என்று அமைச்சர் கூறியதாக பரப்பப்படும் பதிவு -2
Source: Facebook

Archive Link: https://archive.ph/HIjmH

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.   

Fact Check/Verification

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் சர்ச்சைக்குரிய பேச்சுகளையும் தவறான விஷயங்களையும் அடிக்கடி பொதுவெளியில் பேசி வருகின்றார்.

சமீபத்தில் கூட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து ராஜேந்திர பாலாஜி அவர்கள் பேசுகையில், ‘மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்துக் குடித்தால் கொரோனாவிலிருந்து எல்லாமே நம்மை விட்டு ஓடிவிடும்’ என்று பேசினார்.

அமைச்சரின் இந்த கருத்தை நியூஸ்செக்கர் தமிழ் தரப்பில் ஆய்வு செய்து, அது தவறான ஒன்று என்று உரிய ஆதாரத்துடன் விளக்கியிருந்தோம். அச்செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதனைத் தொடர்ந்து, தற்போது கடல்நீரை விவசாயத்திற்கு திருப்பி விடுவேன் என்று அமைச்சர் கூறியதாகக் கூறி நியூஸ் 7 தமிழின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உண்மையில் இவ்வாறு ஒரு வாக்குறுதியை ராஜேந்திர பாலாஜி அவர்கள் கூறினாரா என்பதை அறிய, முதலில் நியூஸ் 7 தமிழின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம்.

அவ்வாறு தேடியதில் இதன் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து நம்மால் அறிய முடிந்தது. உண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்றாகும்.

உண்மையில் பிரச்சாரத்தின்போது,

 “கடலில் கலக்கும் தாமிரபரணி நீரை திருப்பிவிட்டு ராஜபாளையம் உட்பட விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுப்பேன்”  

என்றே ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

இந்த தகவலானது நியூஸ் 7 தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் புகைப்படச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படச் செய்தியே எடிட் செய்யப்பட்டு ராஜேந்திர பாலாஜி அவர்கள் கடல்நீரை விவசாயத்திற்கு திருப்பி விடுவேன் என்று கூறியதாக சமூக வலைத்தளப் பக்கங்களில் பரப்பப்படுகின்றது.

வாசகர்கர்களின் புரிதலுக்காக உண்மையானப் புகைப்படச் செய்தியையும் எடிட் செய்யப்பட்டப் புகைப்படச் செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

கடல்நீரை விவசாயத்திற்கு திருப்பி விடுவேன் என்று அமைச்சர் கூறியதாக பரப்பப்படும் பதிவின் உண்மைத்தன்மை
ஒப்பீடுப் படம்

Conclusion

“வீணாக கிடக்கும் கடல்நீரை திருப்பி விட்டு, ராஜபாளையம் உட்பட விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுப்பேன்” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் பேசியதாக சமூக வலைத்தளங்களில் பரப்படும் புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

News 7 Tamil: https://twitter.com/news7tamil/status/1372128893168054276

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,500

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.