வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkராதாரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் என்றாரா அண்ணாமலை?

ராதாரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் என்றாரா அண்ணாமலை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ராதாரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.       

ராதாரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

திமுகவை கண்டித்து பாஜக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான ராதாரவி கலந்துக்கொண்டு பேசுகையில்  “இந்தியாவில் 2 பெரிய அக்யூஸ்டுகள் இருக்கிறார்கள், ஒன்று மோடி, இரண்டு அமித்ஷா, கருவறுத்துவிடுவார்கள்” என்று திமுகவை எச்சரித்து பேசினார்.

ராதாரவியின் இப்பேச்சானத மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், “ராதாரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் குடித்துவிட்டு பேசுவதை பொருட்படுத்த தேவையில்லை. பிரதமர், உள்துறை அமைச்சரை அக்யூஸ்டுகள் என குறிப்பிட்டது தவறுதான்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ராதாரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்  - 01

Twitter Link | Archive Link

ராதாரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்  - 02

Facebook Link

ராதாரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்  - 03

Facebook Link

Also Read: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு திமுக ஆட்சியில் தமிழக காவல்துறையினர் சல்யூட் அடித்ததாக பரவும் வீடியோ!

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

ராதாரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

ஜூனியர் விகடனின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், முன்னதாக  ஜூனியர் விகடன் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என உறுதி செய்ய, ஜூனியர் விகடனின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.

இதில் ஜூனியர் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. ஆகவே இதனைத் தொடர்ந்து விகடனின் ஆசிரியர் குழுவில் ஒருவரான ஐ.பிரிட்டோவைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்ததில், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து அண்ணாமலை அவர்களை தொடர்புக்கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர், இத்தகவல் பொய்யானது என்று பதிலளித்தார்.

Also Read: இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா?

Conclusion

ராதாரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.       

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False

Sources

Phone conversation with Annamalai, President, Tamilnadu BJP, on 06/07/2022
Phone conversation with I.Britto, Vikatan, on 06/07/2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular