சனிக்கிழமை, ஜூலை 27, 2024
சனிக்கிழமை, ஜூலை 27, 2024

HomeFact Checkசிதம்பரத்தில் போக்குவரத்து விதியை முறையாகக் கடைபிடிக்கும் வாகன ஓட்டிகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சிதம்பரத்தில் போக்குவரத்து விதியை முறையாகக் கடைபிடிக்கும் வாகன ஓட்டிகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: சிதம்பரத்தில் போக்குவரத்து விதிகளை மதித்து வரிசையாக நிற்கும் வாகன ஓட்டிகள்

Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் பரவுகிறது. அப்புகைப்படம் மிசோரமைச் சேர்ந்ததாகும்.

சிதம்பரத்தில் போக்குவரத்து விதிகளை மதித்து வரிசையாக நிற்கும் வாகன ஓட்டிகள் என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”சிதம்பரம் கீழ ராஜ வீதி…இந்த perfect தான் நாங்க” என்று இந்த புகைப்படம் சமூக வலைத்தளப்பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Screenshot from x @MegarvinS

X Link/Archived Link

Screenshot from x @saranya121289

X Link/Archived Link

Screenshot from Facebook/TAMILPALSUVAIKATHAMPAM

Facebook Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினாரா?

Fact Check/Verification

சிதம்பரத்தில் போக்குவரத்து விதிகளை மதித்து வரிசையாக நிற்கும் வாகன ஓட்டிகள் என்பதாக பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அப்புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்தே பரவி வருகிறது என்பதும், அப்புகைப்படம் மிசோரமில் எடுக்கப்பட்டது என்பதும் நமக்கு உறுதியாகியது.

கடந்த 2022ஆம் ஆண்டு சந்தீப் அகலாவத் என்கிற நபர் இப்புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து “I have seen this kind of discipline only in Mizoram. There are no fancy cars, no big egos, no road rage, no honking and no तू जानता नहीं है मेरा बाप कौन है…. no one is in a tearing hurry…there is calm and serenity all around…” என்று தெரிவித்திருந்தார்.  

அதனைத் தொடர்ந்து, First Post , Hindustan Times உள்ளிட்ட ஊடகங்களிலும் இப்புகைப்படம் வைரலாகப் பகிரப்பட்டது. “Commuters obeying traffic rules during jam win hearts, check viral picture here” என்றும், Anand Mahindra praises Mizoram for following traffic rules in Twitter post என்றும் அந்த ஊடகங்கள் இப்புகைப்படத்தை பகிர்ந்திருந்தன.

குறிப்பிட்ட புகைப்படமே தற்போது சிதம்பரத்தில் போக்குவரத்து விதிகளை மதித்து வரிசையாக நிற்கும் வாகன ஓட்டிகள் என்பதாக பரவி வருகிறது என நமக்கு உறுதியாகியது.

 Also Read: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் 2022ஆம் ஆண்டு வீடியோ!

Conclusion

சிதம்பரத்தில் போக்குவரத்து விதிகளை மதித்து வரிசையாக நிற்கும் வாகன ஓட்டிகள் என்று பரவும் புகைப்படம் மிசோரத்தைச் சேர்ந்தது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X Post From, Sandeep Ahlawat, Dated March 01, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular