Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Coronavirus
தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அதிக அளவில் ஆணுறைகள் விற்பனையானதாக நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்றதையடுத்து, முழு ஊரடங்குக்கு அடுத்ததாக நேற்று (26/05/2021) முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இறப்பு போன்ற அத்தியாவசியமான தேவைகள் தவிர மற்ற எதற்காகவும் மக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருட்களின்றி மக்கள் அவதிப்படக் கூடாது என்பதற்காக கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களுக்கு மட்டும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காய்கறி கடைகளில் மட்டுமல்லாமல், நகை கடைகள், ஜவுளிக் கடைகள் போன்றவற்றிற்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பொருட்களை வாங்கி குவித்தனர்.
இந்நிலையில் இந்த தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அதிக அளவில் ஆணுறைகள் விற்பனையானதாக கூறி நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link: https://archive.ph/UzMay
Archive Link: https://archive.ph/GZpyr
Archive Link: https://archive.ph/NfnCB
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அதிக அளவில் ஆணுறைகள் விற்பனையானதாக நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இவ்வாறு ஒரு செய்தி நியூஸ் 7 தமிழில் வெளிவந்துள்ளதா என்பதை உறுதி செய்ய அந்நிறுவனத்தின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இச்செய்தி குறித்து தேடினோம்.
இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்டின் பின்புலத்தில் உள்ள உண்மைத்தன்மை குறித்து நம்மால் அறிய முடிந்தது. உண்மையில் தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அதிக அளவில் ஆணுறைகள் விற்பனையானதாக பரவும் நியூஸ்கார்ட் பொய்யானதாகும்.
இத்தகவலை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தனது சமூக ஊடகப் பக்கங்களில் உறுதி செய்திருந்தது.
இந்த தளர்வுகளற்ற ஊரடங்கை அடிப்படையாக கொண்டு பல பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. சமீபத்தில் கூட இந்த ஊரடங்கின் காரணமாக தென்காசியில் பஜ்ஜி மற்றும் போண்டா செய்ய உபயோகிக்கப்படும் மாவு பாக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக செய்தி ஒன்று பரப்பப்பட்டது.
இதனை நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்து பொய்யானது என்று நிரூபித்திருந்தோம். அச்செய்தியைப் படிக்க: https://newschecker.in/ta/fact-checks-ta/thenkasi
இதன் வரிசையில் தற்போது தமிழகத்தில் ஆணுறைகள் அதிகளவில் விறபனையானதாக பொய் செய்தி பரப்பப்பட்டு வருகின்றது.
தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அதிக அளவில் ஆணுறைகள் விற்பனையானதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
News 7 Tamil: https://www.facebook.com/news7tamil/photos/4651217724940399
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 5, 2023
Gayathri Jayachandran
May 14, 2020
Vijayalakshmi Balasubramaniyan
March 18, 2021