Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: ஆவணி அவிட்ட தினத்தில் பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்க முயன்ற திகவினர் கைது
Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
ஆவணி அவிட்டத்திற்காக பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்திற்கு முயன்ற திராவிட கழகத்தினர் கைது என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“ஆவணி அவிட்டம் சமயத்தில், தி.க சார்பில் பன்றிக்கு பூணுல் போடும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கும் நிலையில் பன்றிகளை கொண்டுவந்த தி.க நிர்வாகி கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்த நபர் இதில் எது பன்றி என கேட்டுக்கொண்டே நகர்ந்து சென்றார்” என்று இந்த புகைப்படம் வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: காஷ்மீர் அரசு பள்ளியில் முஸ்லீம் பெண்களை ஸ்லோகம் படிக்க கட்டாயப்படுத்தியதா பாஜக?
ஆவணி அவிட்டத்திற்காக பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்திற்கு முயன்ற திராவிட கழகத்தினர் கைது என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஆகஸ்ட் 07, 2017 அன்று ”பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் – தபெதிகவைச் சேர்ந்த 9 பேர் கைது” என்று One India Tamil செய்தி வெளியிட்டிருந்தது. அதில் இப்புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், dravidianatheism என்கிற இணையதளப்பக்கத்திலும் ”திராவிட ஆட்சி-ஆரிய ஆட்சி, கம்யூனல் பாம்பு- செக்யூலரிஸ பன்றி, சூத்திர ஐயா- பார்ப்பன அம்மையார்” என்கிற தலைப்பில் ஆகஸ்ட் 12, 2017 அன்று வெளியாகியிருந்த கட்டுரையிலும் இப்புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்த மேலும் ஒரு கட்டுரையை இங்கே படியுங்கள்.
எனவே, வைரலாகும் இப்புகைப்படங்கள் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானவை என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: ரெனால்ட்ஸ் 045 Fine Carbure பேனா தயாரிப்பு நிறுத்தம் என்று பரவிய தகவல் உண்மையா?
ஆவணி அவிட்டத்திற்காக பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்திற்கு முயன்ற திராவிட கழகத்தினர் கைது என்று பரவும் புகைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
News Report From, OneIndia Tamil, Dated August 07, 2017
Report from, Dravidianatheism, Dated August 12, 2017
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)