Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மரங்கொத்திகளின் வீட்டைப் பாதுகாத்த கென்யா என்பதாகப் புகைப்படச்செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
”கென்யா நாட்டில் முந்தைய மரத்திலாலான மின்கம்பத்தில் வாழ்ந்த மரங்கொத்தியின் வீட்டைப் பழுதுபடாமல் பாதுகாப்பாக அகற்றி புதிய சிமெண்ட் மின்கம்பத்தில் பொருத்தி மரங்கொத்தி பறவையின் வாழ்விடத்தை பாதுகாத்து நம் மனங்களை கொத்தி சென்ற அந்த மனித தெய்வங்களுக்கு நன்றி…” என்பதாக அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இப்புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
Also Read: ஐரோப்பிய செய்தித்தாளில் பிரதமர் மோடியை புகழும் கார்ட்டூன் வெளியானதா? உண்மை என்ன?
மரங்கொத்திகளின் வீட்டைப் பாதுகாத்த கென்யா என்பதாகப் புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியதுடன் கீ-வேர்ட் மூலமாகவும் தேடினோம்.
அதன் முடிவில், கடந்த நவம்பர் 2021 ஆம் ஆண்டு “Fmvoxucacha” என்கிற ஸ்பானிஷ் இணையதள செய்தித்தாளில் வெளியான கட்டுரை ஒன்று நமக்குக் கிடைத்தது. ஸ்பானிஷ் மொழியில் இந்த கட்டுரை வெளியாகியிருந்தது.
அர்ஜெண்டினாவின் உகாச்சா என்கிற ஊரில் செயல்படக்கூடிய உள்ளூர் எஃப்.எம் ஆகும் இந்த FmVoxucacha. உகாச்சாவில் மின்சார கம்பங்களை சீரமைத்தபோது ஏற்கனவே இருந்த பழைய மின்கம்பத்தில் இரண்டு மரங்கொத்திப் பறவைகள் வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.
எனவே, புதிய மின்கம்பத்தை அமைத்த உகாச்சா மின்சார வாரிய அதிகாரிகள் பழைய மின்கம்பத்தில் இருந்த மரங்கொத்திகளின் பொந்து இருக்கும் பகுதியை மட்டும் ஜாக்கிரதையாக வெட்டி புதிய கம்பத்துடன் இணைத்துவிட்டனர்.
அவர்களுடைய இந்த மனிதத்தன்மையுடனான செயல் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படங்களை உகாச்சா எஃப்.எம் செய்தியாளர் Gustavo Oscar Perusia செய்தியுடன் FmVoxucacha பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வைரல் புகைப்படங்களை எடுத்ததும் அவர்தான்.
மேலும், அவருடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்த கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
இச்செய்தியை, Earthly Mission மற்றும் The DODO பக்கங்களும் Gustavo Oscar perusia பெயருடன் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நடைபெற்றது அர்ஜென்டினா நாட்டில் என்பதும், இது கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான செய்தி என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது.
இப்புகைப்படமே, தற்போது கென்யா நாட்டில் எடுக்கப்பட்டதாக தவறான செய்தியுடன் பகிரப்பட்டு வருகிறது.
Also Read: ஈரோடு கிழக்கு தொகுதியில் நீட் ரகசியத்தை வெளியிடுவேன் என்றாரா உதயநிதி?
மரங்கொத்திகளின் வீட்டைப் பாதுகாத்த கென்யா என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post From, Gustavo Oscar Perusia, Dated November 29, 2021
Article From, FMVoxUcacha
Article From, The DODO, Dated January 24, 2023
Article From, Earthly Mission
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)