Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சுவர் ஏறி குதித்தார் அகிலேஷ் யாதவ்.
Fact: மறைந்த அரசியல் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணின் சிலைக்கு அஞ்சலி செலுத்த அகிலேஷ் யாதவிற்கு அனுமதி மறுத்ததை தொடர்ந்து, சுவர் ஏறி குதித்து ஜெயபிரகாஷ் நாராயணின் சிலைக்கு மரியாதை செய்தார் அகிலேஷ். இதுத்தொடர்பான வீடியோவே தவறான தகவலுடன் பரப்பப்பட்டு வருகின்றது.
“பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சுவர் ஏறி குதிக்கும் அகிலேஷ் யாதவ்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியில் இருந்து விலகுவதாகப் பரவும் 2018ஆம் ஆண்டு செய்தி!
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சுவர் ஏறி குதித்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.
இத்தேடலில் “Akhilesh Yadav: அனுமதி மறுக்கப்பட்டதால் சுவரில் ஏறி குதித்து முன்னேறிய அகிலேஷ் யாதவ்” என்று தலைப்பிட்டு அக்டோபர் 11, 2013 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் வீடியோவின் காட்சி புகைப்படமாக பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இச்செய்தியில் சுதந்திர போராட்ட வீரரும் அரசியல் தலைவருமான ஜெயபிரகாஷ் நாராயணின் சிலைக்கு அவரது பிறந்தநாளன்று மரியாதை செலுத்த அகிலேஷ் யாதவ்விற்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, லக்னோவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயணன் சர்வதேச மையத்தின் சுவர் ஏறி குதித்து ஜெயபிரகாஷ் நாராயணின் சிலைக்கு அகிலேஷ் மரியாதை செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடியதில் புதிய தலைமுறையிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
இதுத்தவிர்த்து வேறு சில ஊடகங்களும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
தொடர்து தேடுகையில் அகிலேஷ் யாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. இப்பதிவில் அகிலேஷ் சுவர் ஏறி குதிக்கும் படமும் இடம்பெற்றிருந்தது.
Also Read: திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் பழைய வீடியோ!
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சுவர் ஏறி குதித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
மறைந்த அரசியல் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணின் சிலைக்கு அஞ்சலி செலுத்த அகிலேஷ் யாதவிற்கு அனுமதி மறுத்ததை தொடர்ந்து, சுவர் ஏறி குதித்து ஜெயபிரகாஷ் நாராயணின் சிலைக்கு அகிலேஷ் மரியாதை செலுத்தினார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோவே தவறான தகவலுடன் பரப்பப்பட்டு வருகின்றது. இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from Hindustan Times Tamil, Dated October 11, 2023
Report from Puthiya Thalaimurai, Dated October 12, 2023
X post from Akhilesh Yadav, President, Samajwadi Party, Dated October 11, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)