ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 30, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 30, 2024

HomeFact Checkஅகிலேஷ் யாதவ் மேல் செருப்புகள் வீசப்பட்டதா?

அகிலேஷ் யாதவ் மேல் செருப்புகள் வீசப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மேல் செருப்புகள் வீசப்பட்டது.

Fact: அகிலேஷ் யாதவ் மேல் பூமாலைகளே வீசப்பட்டன; செருப்புகள் வீசப்படவில்லை.

உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மீது செருப்புகள் வீசப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மேல் செருப்புகள் வீசப்பட்டதாக பரப்பப்படும் தகவல்

X Link | Archive Link

உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மேல் செருப்புகள் வீசப்பட்டதாக பரப்பப்படும் தகவல்

X Link

உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மேல் செருப்புகள் வீசப்பட்டதாக பரப்பப்படும் தகவல்

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா இந்தியா டுடே?

Fact Check/Verification

உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மேல் செருப்புகள் வீசப்பட்டதாக பரப்பப்படும் வீடியோவை பெரிதுப்படுத்தி பார்க்கையில், அகிலேஷ் மீது பூக்கள் மற்றும் மாலைகள் மட்டுமே வீசப்பட்டுள்ளதை காண முடிந்தது.

உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மேல் செருப்புகள் வீசப்பட்டதாக பரப்பப்படும் தகவல்

இதனைத் தொடர்ந்து வைரலாகும் வீடியோவில் குறிப்பிட்டுள்ள @vishwasyadavauraiyawale என்கிற பயனர் ஐடியையுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் தேடுகையில் ‘ஜெய் சமாஜ்வாடி, ஜெய் அகிலேஷ்’ என்று குறிப்பிட்டு இவ்வீடியோ பகிரப்படிருப்பதை காண முடிந்தது.

அவ்வீடியோவின் தரமானது வைரலாகும் வீடியோக்களை காட்டிலும் உயர்வாக இருந்தது. இந்த வீடியோவை பெரிதுப்படுத்தி பார்க்கையில்  அகிலேஷ் யாதவ் மீது மீது பூக்கள் மற்றும் மாலைகள் மட்டுமே வீசப்பட்டுள்ளன என தெளிவாக காண முடிந்தது.

உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மேல் செருப்புகள் வீசப்பட்டதாக பரப்பப்படும் தகவல்

இதனையடுத்து அகிலேஷ் மீது செருப்புகள் வீசப்பட்டதாக செய்தி ஏதும் ஊடகங்களில் வந்துள்ளதா என தேடியதில், அவ்வாறு எந்த ஒரு செய்தியும் வரவில்லை என அறிய முடிந்தது.

இதன்பின் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் குறித்து தேடுகையில் அகிலேஷ் யாதவின் யாத்திரை 40 கிலோமீட்டரை கடந்து கன்னோஜ் நகரை அடைந்ததாக டைனிக் பாஸ்கர் வெளியிட்டிருந்த செய்தியை காண முடிந்தது. இச்செய்தியில் இணைக்கப்பட்டிருந்த வீடியோவில் அகிலேஷ் யாதவ் வைரலாகும் வீடியோவில் காணப்படுவதுபோல் சிவப்பு நிற வாகனத்தின்மேல் நிற்பதை காண முடிந்தது. இச்செய்தியில் எவ்விடத்திலும் அகிலேஷ் மீது செருப்புகள் வீசப்பட்டதாக குறிப்பிட்டிருக்கவில்லை.

உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மேல் செருப்புகள் வீசப்பட்டதாக பரப்பப்படும் தகவல்

தொடர்ந்து தேடுகையில் நியூஸ் 24 ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் அகிலேஷ் யாதவ் பூமாலைகளுடன் வரவேற்கப்பட்டதாக கூறி  வைரலாகும் இதே வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. இச்செய்தியிலும் அகிலேஷ் மீது செருப்புகள் வீசப்பட்டதாக குறிப்பிட்டிருக்கவில்லை.

உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மேல் செருப்புகள் வீசப்பட்டதாக பரப்பப்படும் தகவல்

 Also Read: மின்சார கட்டணத்தை உயர்த்தவிருக்கின்றதா திமுக அரசு?

Conclusion

உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மேல் செருப்புகள் வீசப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Instagram post by @ on 2nd May 2024.
Report published by Dainik Bhaskar on 27th April 2024.
X post by News 24 on 10th May 2024.

இந்த செய்தியானது நியூஸ்செக்கர் இந்தியில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular