Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நயினார் நாகேந்திரன் வீட்டு விருந்தில் அண்ணாமலை அவமானப்படுத்தப்பட்டார்.
வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்ப்பட்டு மாற்றப்பட்டதாகும். புதிய தலைமுறை தரப்பு இதை உறுதி செய்துள்ளது.
நெல்லையில் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் வைக்கப்பட்ட விருந்தில் பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு வைக்காமல் அவமானப்படுத்தப்பட்டதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவல் குறித்த உண்மையை அறிய நியூஸ்செக்கர் சார்பில் இதுக்குறித்து ஆராய முடிவு செய்தோம்.
Also Read: அன்வர் ராஜா போனால் போகட்டும்; அதிமுகவிற்கு இஸ்லாமிய வாக்குகள் தேவையில்லை என்றாரா ராஜேந்திர பாலாஜி?
நயினார் நாகேந்திரன் வீட்டு விருந்தில் அண்ணாமலை அவமானப்படுத்தப்பட்டதாக பரப்பப்படும் நியூஸ்கார்டில் ‘அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படாததால் பரபரப்பு!’ எனும் வாசகம் மட்டும் வித்தியாசமான எழுத்துருவில் (Font) இருப்பதை காண முடிந்தது.

அது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்த ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் அந்த நியூஸ்கார்டு குறித்து தேடினோம்.
அத்தேடலில் நயினார் நாகேந்திரன் வீட்டு விருந்து குறித்து புதிய தலைமுறை இரண்டு நியூஸ்கார்டுகளை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அதில் ஒரு நியூஸ்கார்டு வைரலாகும் நியூஸ்கார்டுடன் ஒற்றுப்போவதை காண முடிந்தது.

ஆனால் உண்மையான நியூஸ்கார்டில்‘அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படாததால் பரபரப்பு!’ என்கிற வாசகம் இடம்பெற்றிருக்கவில்லை; மாறாக அவ்விடத்தில் ‘முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா, சுதாகர் ரெட்டி உள்ளிட்டோருக்கு விருந்து’ என்கிற வாசகமே இடம்பெற்றிருந்தது.
இதன்படி பார்க்கையில் வைரலாகும் நியூஸ்கார்டானது எடிட் செய்து மாற்றப்பட்ட போலியான நியூஸ்கார்டு என அறிய முடிகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.


இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.
Also Read: இன்பநிதி பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக திமுகவில் நியமிக்கப்பட்டுள்ளாரா அன்வர் ராஜா?
நயினார் நாகேந்திரன் வீட்டு விருந்தில் அண்ணாமலை அவமானப்படுத்தப்பட்டதாக பரப்பப்படும் நியூஸ்கார்டானது எடிட் செய்து மாற்றப்பட்ட போலியான நியூஸ்கார்டாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook post by Puthiya Thalaimurai, dated July 26, 2025
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai
Vijayalakshmi Balasubramaniyan
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 17, 2025