Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர்களும் பாலியல் குற்றவாளிகளும் பாஜகவில் உள்ளனர் என்று அண்ணாமலை கூறினார்.
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அப்பேட்டியில் அவர் கூறிய கருத்தொன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக தாக்குவதாக இருந்தது.
இதனைடுத்து அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அண்ணாமலைக்கு எதிராக கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில்“என்னுடைய கருத்துக்களை தவறாக புரிந்துகொண்டு அதிமுக முன்னாள் அமைச்சர்களும், அதன் மகளிர் அணி உறுப்பினர்களும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர். அவர்களைப் போல் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை. ஆனால் பாஜகவில் குண்டர் சட்டம் உட்பட பல்வேறு வழக்குகளில் சிறை சென்றவர்களும் பாலியல் குற்றவாளிகளும் இருக்கிறார்கள் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்!” என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்றாரா பொன்முடி?
குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர்களும் பாலியல் குற்றவாளிகளும் பாஜகவில் உள்ளனர் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
இதில் அதிமுகவினரின் கண்டனங்களுக்கு பதில் கூறும் வகையில் அண்ணாமலை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் இந்த அறிக்கையில் எந்த ஒரு இடத்திலும் பாஜகவில் குண்டர் சட்டம் உட்பட பல்வேறு வழக்குகளில் சிறை சென்றவர்களும் பாலியல் குற்றவாளிகளும் இருக்கிறார்கள் என்று அண்ணாமலை கூறியதாக இல்லை.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது ஜூனியர் விக்டனின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் ”கூட்டணி கட்சி விரும்புவதையெல்லாம் பேச முடியாது” – அண்ணாமலை!” என்று தலைப்பிட்டு அண்ணாமலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த கருத்தை ஒரு நியூஸ்கார்டாக அந்நிறுவனம் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இதை தவிர்த்து அண்ணாமலை குறித்து வேறு எந்த நியூஸ்கார்டையும் இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கவில்லை. ஆகவே விகடன் ஆசிரியர்களில் ஒருவரான பிரிட்டோவை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என தெளிவுப்படுத்தினார்.
இதனையடுத்து தமிழக பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில் அத்தகவல் பொய்யானது என்று அவரும் உறுதி செய்தார்.
குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர்களும் பாலியல் குற்றவாளிகளும் பாஜகவில் உள்ளனர் என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Tweet from BJP Tamilnadu, Dated June 13, 2023
Phone Conversation with S.G.Surya, State Secretary, BJP, Dated June 15, 2023
Phone Conversation with Britto, Editor, Vikatan, Dated June 15, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
July 7, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 12, 2025
Ramkumar Kaliamurthy
June 2, 2025