Monday, March 17, 2025
தமிழ்

Fact Check

இந்துக்கள் பாதிக்கப்பட்டால் திமுகவுக்கு என்ன கவலை என்றாரா அண்ணாமலை?

banner_image

கொரோனா மூன்றாம்  அலை வந்தாலும் இந்துக்கள்தானே பாதிக்கப்பட போகிறார்கள்? இந்துக்கள் பாதிக்கப்பட்டால் திமுகவுக்கு என்ன கவலை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகின்றது.

இந்துக்கள் பாதிக்கப்பட்டால் திமுகவுக்கு என்ன கவலை என்று அண்ணாமலை பேசியதாக பரவும் நியூஸ்கார்ட்

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் வரும் பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படியும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பண்டிகை காலத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இருந்த போதிலும் தனிநபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக பாஜகவின் தலைவரான அண்ணாமலை, “கொரோனா மூன்றாம்  அலை வந்தாலும் இந்துக்கள்தானே பாதிக்கப்பட போகிறார்கள்? அதைப்பற்றி திமுக அரசுக்கு  என்ன கவலை? உடனடியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிட வேண்டும்” என்று கூறியதாக நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்துக்கள் பாதிக்கப்பட்டால் திமுகவுக்கு என்ன கவலை என்று அண்ணாமலை பேசியதாக பரவும் நியூஸ்கார்ட் - 1

Facebook Link

இந்துக்கள் பாதிக்கப்பட்டால் திமுகவுக்கு என்ன கவலை என்று அண்ணாமலை பேசியதாக பரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

இந்துக்கள் பாதிக்கப்பட்டால் திமுகவுக்கு என்ன கவலை என்று அண்ணாமலை பேசியதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: குட்கா மென்ற மணமகனை அறைந்த மணமகள்; வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?

Fact Check/Verification

கொரோனா மூன்றாம்  அலை வந்தாலும் இந்துக்கள்தானே பாதிக்கப்பட போகிறார்கள்? இந்துக்கள் பாதிக்கப்பட்டால் திமுகவுக்கு என்ன கவலை என்று அண்ணாமலை பேசியதாக பரவும் நியூஸ்கார்ட் பரவியதைத் தொடர்ந்து இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டுள்ளதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.

இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது. பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததை எதிர்த்து அண்ணாமலை பேசியது உண்மையே. ஆனால் அவர் வைரலாகும் நியூஸ்கார்டில்  இருக்கும் கூற்றை கூறவில்லை.

உண்மையில் அவர் “விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கையில் எடுத்து திமுக அரசியல் செய்ய நினைத்தால் ஆட்சியை இழக்க நேரிடும்” என்றே பேசியுள்ளார். இதை நியூஸ் 7 தமிழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.

Archive Link

இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்காணப்படும் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் துறையினரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். அவர்களும், இது பொய்யான நியூஸ்கார்ட் என்பதை நமக்கு உறுதி செய்தனர்.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: உஜ்ஜைனில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டவர்களுக்கு எதிராக கூடிய கூட்டமா இது?

Conclusion

கொரோனா மூன்றாம்  அலை வந்தாலும் இந்துக்கள்தானே பாதிக்கப்பட போகிறார்கள்? இந்துக்கள் பாதிக்கப்பட்டால் திமுகவுக்கு என்ன கவலை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதனை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered

Our Sources

News 7 Tamil


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.