Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மகாராஷ்டிர காவல்துறையினரால் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி, பொறியாளர் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக எழுப்பப்பட்டுள்ள புகார் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் காவல்நிலையத்தில் துன்புறுத்தப்படுவதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
மும்பையில் 52 வயதான கட்டிட வடிவமைப்பு பொறியாளர் அன்வே நாயக் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது தற்கொலை கடிதத்தை ஆதாரமாக வைத்து ரைய்காட் காவல்துறையினர், ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்தனர்.
இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமியை காவல்துறையினர் தலைகீழாக நிற்க வைத்து, பெல்ட்டால் அடிப்பதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இதனை பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளரான கவுரவ் கோயல் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து, ‘இப்புகைப்படம் உண்மையாக இருந்தால் மகாராஷ்டிரா அரசுக்கான இறுதித் தீர்ப்பு நாள் இது’ என்று பகிர்ந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இப்புகைப்படத்தில் இருப்பது அர்னாப் கோஸ்வாமிதானா? இதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து ஆராய்ந்து அறிந்து கொள்ள நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் முடிவு செய்தோம்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய, மேற்கூறிய புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
அதில், அர்னாப் கோஸ்வாமியை காவல்துறையினர் அடித்து, உதைப்பதாக பகிரப்படும் புகைப்படம் உண்மையில் உத்திரபிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது.
மொபைல் போனைத் திருடியதாக கொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் கைதான ஒருவர் காவல்துறையினரால் அடித்து, உதைக்கப்பட்டதும் அந்த வீடியோ வைரலாகியதைத் தொடர்ந்து மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள காவல்துறையினர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதும் ஜனவரி மாதத்தில் நடந்த செய்தி என்பது நமக்குத் தெரிய வந்தது.
இச்செய்தியினை நியூஸ் 18 ஊடகம், தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், ஜீ நியூஸும் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. இதனை கோயல் வெளியிட்டுள்ள பதிவின் கீழேயே பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காவல்துறையினரால் அர்னாப் கோஸ்வாமி துன்புறுத்தப்பட்டார் என்பதாக பரவும் புகைப்படம் உண்மையில் உத்திர பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பதையும், அப்புகைப்படத்தில் இருப்பது அர்னாப் அல்ல என்பதையும் நியூஸ் செக்கரின் விரிவான ஆய்வின் மூலமாக வாசகர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளோம்.
Twitter: https://twitter.com/angry_birdu/status/1324165368080818177?s=20
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)