Claim: அருணாச்சல் பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்குத்தான் விட்டிருக்கிறோம்; அர்ஜூன் ராம் மேக்வால்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவி வருகிறது.
அருணாச்சல் பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்குத்தான் விட்டிருக்கிறோம்; அவர்கள் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகிறது.
“பச்சையா சொன்னா..பாரத மாதாவையும் பழக்க தோஷத்தில் வித்துட்டான்” என்று இதனைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
அருணாச்சல் பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டிருக்கிறோம் என்று அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் ஜூனியர் விகடன் பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் தேடியபோது அப்படி எந்த நியூஸ்கார்டும் கிடைக்கவில்லை.
எனவே, ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவு இணை ஆசிரியர் பிரிட்டோவைத் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்தார்.
Also Read: கோவையில் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுத்ததாகப் பரவும் 2023ஆம் ஆண்டு வீடியோ!
Conclusion
அருணாச்சல் பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டிருக்கிறோம் என்று அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Phone Conversation With, I.Britto, Junior Vikatan Digital, Dated April 02, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)