Monday, December 22, 2025

Fact Check

பாரத் அரிசியை இஸ்லாமிய குடும்பத்தினர் வாங்கி செல்வதாக பரவும் எடிட் படம்!

banner_image

Claim: பாரத் அரிசியை இஸ்லாமிய குடும்பத்தினர் வாங்கி செல்வதாக பரவும் படம்

Fact: வைரலாகும் படம் எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.  இப்படம் கடந்த 2 வருடங்களாகவே சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

மத்திய அரசு ஒரு கிலோ அரிசியை ₹29க்கு பாரத் அரசி என்கிற பெயரில் விற்பனை செய்யும் திட்டத்தை கடந்த செவ்வாய் கிழமை (06/02/2024) தொடங்கியது. இந்நிலையில் இஸ்லாமிய குடும்பம் ஒன்று பாரத் அரிசியை வாங்கி செல்வதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாரத் அரிசியை இஸ்லாமிய குடும்பத்தினர் வாங்கி செல்வதாக வைரலாகும் புகைப்படம்

X Link | Archived Link

பாரத் அரிசியை இஸ்லாமிய குடும்பத்தினர் வாங்கி செல்வதாக வைரலாகும் புகைப்படம்

Archived Link

பாரத் அரிசியை இஸ்லாமிய குடும்பத்தினர் வாங்கி செல்வதாக வைரலாகும் புகைப்படம்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மத்திய பிரதேசம் இந்தூர் பேருந்து நிலையம் என்று பரவும் கனடா வீடியோ!

Fact Check/Verification

பாரத் அரிசியை இஸ்லாமிய குடும்பத்தினர் வாங்கி செல்வதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அதுக்குறித்து தேடினோம்.

அத்தேடலில் டிசம்பர் 04, 2022 அன்று 9gag.com எனும் இணையத்தளத்தில் வைரலாகும் இதே படம் பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது, அப்படத்தில் இடம்பெற்றிருந்த பையில் ₹29 எனும் வார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை.

பாரத் அரிசியை இஸ்லாமிய குடும்பத்தினர் வாங்கி செல்வதாக வைரலாகும் புகைப்படம்

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும், எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

பாரத் அரிசியை இஸ்லாமிய குடும்பத்தினர் வாங்கி செல்வதாக வைரலாகும் புகைப்படம்

இதனையடுத்து பாரத் அரசி குறித்து தேடுகையில், அந்த அரிசியானது ஜியோ மார்ட் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனைத் தளங்களில் விற்பனை செய்யப்படுவதை காண முடிந்தது. அதில் பாரத் அரசியின் மூட்டையானது வைரலாகும் படத்திலிருக்கும் அரிசி மூட்டையிலிருந்து வேறுபட்டிருப்பதை காண முடிந்தது.  

பாரத் அரிசியை இஸ்லாமிய குடும்பத்தினர் வாங்கி செல்வதாக வைரலாகும் புகைப்படம்

 Also Read: 1330 குறள்களையும் மனப்பாடமாக சொல்லும் மாணவர்களுக்கு ₹25000 பரிசாக அளிக்கின்றதா தமிழக அரசு?

Conclusion

பாரத் அரிசியை இஸ்லாமிய குடும்பத்தினர் வாங்கி செல்வதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Post from 9gag.com
Jio Mart Website


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
No related articles found
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,658

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage