வியாழக்கிழமை, ஜூன் 27, 2024
வியாழக்கிழமை, ஜூன் 27, 2024

HomeFact Checkதமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தினரா?

தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தினரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தினர்.

Fact: வைரலாகும் வீடியோவில் போஸ்டரில் இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனின் வாயை தைப்பவர்கள் பாஜகவினரோ அல்லது அண்ணாமலை ஆதரவாளர்களோ இல்லை. அவர்கள் தீபா பேரவையை சார்ந்தவர்களாவர்.

தமிழ்நாடு பாஜகவில்  மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுத்த சில முடிவுகளை முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்து பேசி இருந்த நிலையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் தமிழிசைக்கு எதிராக கண்டனங்களை  தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் அவரின் வாயை தைத்து பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தியதாக பரவும் வீடியோத்தகவல்

X Link | Archive Link

தமிழிசை சௌந்திரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தியதாக பரவும் வீடியோத்தகவல்

Archive Link

தமிழிசை சௌந்திரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தியதாக பரவும் வீடியோத்தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்றாரா தமிழிசை செளந்தரராஜன்?

Fact Check/Verification

தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

அதில் “தமிழிசை போஸ்டரில் வாயை ஊசி நூலால் தைத்து போராட்டம்” என்று தலைப்பிட்டு 22 டிசம்பர் 2018 அன்று வைரலாகும் வீடியோ குறித்து ஒன்இந்தியா தமிழ் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அச்செய்தியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடுபவர்கள் முட்டாள்கள் என்று தமிழிசை கூறியதாகவும் அதை கண்டித்து ஜெ.தீபா பேரவையை சேர்ந்தவர்கள் தமிழிசை போஸ்டரில் வாயை ஊசி நூலால் தைத்து போராட்டம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழிசை சௌந்திரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தியதாக பரவும் வீடியோத்தகவல்
Screengrab from One India News Tamil

தொடர்ந்து தேடுகையில் ஏசியாநெட் நியூஸ் தமிழ், மற்றும் சமயம் தமிழ் உள்ளிட்ட ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளிலும் தீபா பேரவையை சேர்ந்தவர்களே தமிழிசை போஸ்டரை தைத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அச்செய்திகளை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் நமக்கு தெளிவாகுவது யாதெனில்,

  1. வைரலாகும் வீடியோவில் போஸ்டரில் இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனின் வாயை தைப்பவர்கள் பாஜகவினரோ அல்லது அண்ணாமலை ஆதரவாளர்களோ இல்லை. அவர்கள் தீபா பேரவையை சார்ந்தவர்களாவர்.
  2. வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் தற்போது நடந்ததல்ல; 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்ததாகும். அச்சமயத்தில் அண்ணாமலை பாஜகவிலேயே இல்லை.

Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகின்றாரா?

Conclusion

தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக இந்த உண்மையானது தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from One India Tamil, Dated Dember 22, 2018
Report from Samayam Tamil, Dated Dember 21, 2018
Report from Asianet News Tamil, Dated Dember 22, 2018


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular