வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact CheckFact Check: ஜம்மு-காஷ்மீரில் அமைந்த உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் என்று...

Fact Check: ஜம்மு-காஷ்மீரில் அமைந்த உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் என்று பரவிய சீனா வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனையோட்டம் வெற்றி. ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜம்முவில் பாயும் செனாப் நதியின் இணைப்புப் பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம்


Fact
வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றிருப்பது செனாப் ரயில் பாலம் அல்ல. சீனாவின் Shuibai Rail Bridge ஆகும்.

ஜம்மு-காஷ்மீரில் செனாப் நதியின் குறுகே அமைந்துள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டம் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

ஜம்மு-காஷ்மீரில்

’’உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனையோட்டம் வெற்றி. ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜம்முவில் பாயும் செனாப் நதியின் குறுக்கே (பக்கல் – கௌரிக்கு) அமைக்கப்பட்டுள்ள இணைப்புப் பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் மார்ச் 21 ஆம் தேதியன்று வெற்றிகரமாக இயக்கப்பட்டது.” என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஜம்மு-காஷ்மீரில்
Screenshot from Twitter @BS_Prasad
Screenshot from Facebook/vanakkamtirupur1
Screenshot from Facebook/nithy.ganesh.1

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ!

Factcheck / Verification

ஜம்மு-காஷ்மீரில் செனாப் நதியில் அமைந்த உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் என்று பரவிய வீடியோ குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, அது சீனாவில் அமைந்துள்ள பெய்பன் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள Shuibai railway bridge என்று முடிவுகள் நமக்குக் கிடைத்தது.

மேலும், வைரல் வீடியோவில் 0.14 நொடிகளில் சீன மொழியில் எழுத்துக்கள் வருவதை நம்மால் காண முடிந்தது.

தொடர்ந்த நம் தேடலில் DDCPC என்கிற சீனமொழி இணையதளத்தில் வெளியாகியிருந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த சீன Shuibai Rail Bridge அமைப்பும், வைரலாகும் வீடியோவில் உள்ள ரயில் பாலத்தின் அமைப்பும் ஒன்றுதான் என்று அறிய முடிந்தது.

Viral Video Image
DDCPC Video Image

இந்தியாவில் அமைந்துள்ள செனாப் நதி ரயில் பாலத்தை வடிவமைத்த WSP.Com இணையதளத்தில் செனாப் ரயில் பாலத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. வைரலாகும் வீடியோவில் உள்ள பாலத்துடன் இந்த புகைப்படம் வேறுபட்டுள்ளது.

Chenab Bridge Image
Viral Video Image

தொடர்ந்து, மார்ச் 26 அன்று செனாப் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை ஆராய்ந்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள புகைப்படமும் வைரலாகும் வீடியோவில் உள்ள ரயில் பாலத்தில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது.

உலகின் மிக உயரமாக கட்டப்பட்டு வருகின்ற செனாப் ரயில் பாலத்தின் பணிகள் இன்னும் முடிவடையவில்லை; சோதனை ஓட்டமும் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, HighestBridges.com, DBPedia, Stroyone.com ஆகிய இணையதளங்களில் இடம்பெற்றுள்ள சீனாவின் Shuibai railway bridge புகைப்படங்களும் வைரல் வீடியோவில் உள்ள ரயில் பாலத்துடன் ஒத்துப்போகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஈராக்கில் அமைந்துள்ள ராமர்-அனுமன் சிற்பம் என்று பரவும் புகைப்படத்தின் பின்னணி என்ன?

Conclusion

ஜம்மு-காஷ்மீரில் செனாப் நதியில் அமைந்த உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் என்று பரவிய வீடியோ சீனாவைச் சேர்ந்தது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Twitter Post From, Minister Ashwini Vaishnaw, Dated March 26, 2023
Twitter Post From, Ministry of Railways, Dated March 26, 2023
Facebook Post From, Andan, Dated June 27, 2022
WSP
Highest Bridges.com

News.CCTV.com
DDCPC.com
DBPedia
Stroyone.com
News Report From, Times Of India, Dated March 26, 2023
ANI


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular