வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact CheckNewsமுகேஷ் அம்பானியின் பேரனைச் சந்தித்தாரா மோடி?

முகேஷ் அம்பானியின் பேரனைச் சந்தித்தாரா மோடி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

முகேஷ் அம்பானிக்கு புதிதாகப் பிறந்துள்ள பேரப்பிள்ளையைக் காண மோடி அவர்கள் மருத்துவமனைக்கு சென்றதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

முகேஷ் அம்பானி பேரன் குறித்து பரவும் பதிவு

Fact Check/ Verification

புதிதாக ஏற்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்காண விவசாயிகள், தலைநகர் டெல்லியில்  கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்துப் போராடி வருகின்றனர்.

 இப்போராட்டம் தொடங்கி ஏறக்குறைய 20 நாட்கள் ஆகியும், மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இசைந்து, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான எந்த ஒரு முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை.

விவசாயிகளும் வேளாண் சட்டம்  திரும்பப் பெறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவத்தில்லை என்று கூறி, தங்கள் பிடியிலிருந்து  சிறிதும் விலகாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் , “அம்பானிக்கு புதிதாக பிறந்துள்ள பேரனை பார்க்க நேரம் இருக்கிறது. ஆனால் பனியிலும் குளிரிளும் வாடும் விவசாயிகளை நேரில் சந்திக்க நேரமில்லை” என்று கூறி, பிரதமர் மோடி அவர்களை விமர்சித்துப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

முகேஷ் அம்பானி அவர்களுக்கு சமீபத்தில் பேரப்பிள்ளைப் பிறந்துள்ளது. முகேஷ் அம்பானி தனது பேரப்பிள்ளையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இந்திய ஊடகங்களில் மாபெரும் செய்திப் பொருளாக மாறியது.

அம்பானி பேரன் குறித்து ஊடகங்களில் வந்தச் செய்தி
Source: Google Seatch/Screen shot

இதேபோல் மோடி அவர்கள் முகேஷ் அம்பானி பேரப்பிள்ளையைச் சந்திக்க மருத்துமனைக்குச் சென்றதாகக் கூறப்படும் தகவல் குறித்து ஊடகங்களின் ஏதேனும் செய்தி வந்துள்ளதா என தேடினோம். ஆனால் நம் தேடலில் இதுக்குறித்தச் செய்தி ஏதும் வந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் தென்படவில்லை.

ஆகவே ஆய்வின் அடுத்தப்படியாக, சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம். அவ்வாறு செய்ததில் இப்புகைப்படமானது 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டப் பழைய புகைப்படம் என்பது நமக்கு தெரிய வந்தது.

2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள் மும்பையில் உள்ள HN ரிலையன்ஸ் ஃபவுன்டேஷன் மருத்துவமனையைத் (HN Reliance Foundation Hospital ) திறந்து வைத்து உரையாற்றியுள்ளார்.

முகேஷ் அம்பானியின் மருத்துவமனை திறப்பு விழா குறித்தச் செய்தி
Source: India Today

இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்டப் புகைப்படத்தை வைத்தே தற்போது சமூக வலைத்தளங்களில் மோடி அவர்கள் அம்பானி பேரனைச் சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றதாகப் பொய்யானத் தகவலைப் பரப்பி வருகின்றனர்.

 Conclusion

முகேஷ் அம்பானி அவர்களுக்கு புதிதாக பிறந்துள்ள பேரப்பிள்ளையைக் காண மோடி அவர்கள் மருத்துவமனைக்கு சென்றதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் தவறானது என்பதையும், அப்புகைப்படமானது 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதென்பதையும் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

Facebook Profile: https://www.facebook.com/kanna.tamanna/posts/3574210492699073

Twitter Profile: https://twitter.com/ElectronicVoti1/status/1338502908556394497

Twitter Profile: https://twitter.com/jaikumar0431974/status/1338502824666140674

India Today: https://www.indiatoday.in/india/story/modi-make-in-india-healthcare-digital-mumbai-pm-clean-neonatal-maternal-mortality-224540-2014-10-25


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular