Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பிரதமர் மோடி தனக்குத் தானே கடிதம் எழுதியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குதலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து நாடெங்கிலும் பல தலைவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி வருகின்றனர். இந்நிலையில் பிரதமருக்கு பிரதமரே கடிதம் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. தமிழகத்தின் பிரதான செய்தி ஊடகமான புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இச்செய்தி ஒளிப்பரப்பப் பட்டதாக இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து நியூஸ் செக்கர் சார்பாக ஆராய நினைத்து, இதுக் குறித்து இணையத் தளங்களில் தேடினோம். அப்போது நமக்கு இதுத் தொடர்பாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. ஆனால் தமிழக முதல்வர் இடஒதுக்கீடு குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்த செய்திகளை நம்மால் காண முடிந்தது.

பின்பு, பரவிய செய்தியில் இடம்பெற்றுள்ளப் படத்தை கூர்மையாக ஆராய்ந்தபோது நம்மால் சில தகவல்களை அறிய முடிந்தது. வைரலான படத்தின் கீழ்பகுதியில், “அரசு பணிகளில் 27% ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்” எனும் வாசகம் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது. இதன்மூலம் கவனக் குறைவு காணமாக இவ்வாறு இடம்பெற்றிருக்கலாமோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டது. இந்தக் கோணத்தில் இதுக்குறித்து நாம் விசாரித்தபோது நமது சந்தேகம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. பொதுவாகவே நியூஸ் ஸ்க்ரோலிங், வீடியோக்கள் போன்றவற்றில் இதுப் போன்ற பிழைகள் அதிகரித்து வருவதை சமீப காலங்களில் நம்மால் காண முடிகிறது. அவ்வாறு தவறாக ஒளிப்பரப்பப்பட்ட செய்தியை படம்பிடித்து வேண்டுமென்றே இது பரப்பப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
எங்களின் விரிவான ஆய்வுக்குப் பின் பிரதமர் மோடி குறித்து பரப்பப்பட்ட இச்செய்தியானது தவறானது என்று நமக்கு உறுதியாகியுள்ளது. இடஒதுக்கீடு குறைத்து முதல்வர் பழனிசாமி அவர்கள் பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்த செய்திதான், கவனக் குறைவு காரணமாக இவ்வாறு தவறாக ஒளிப்பரப்பட்டுள்ளது என்பதும் நமக்கு தெளிவாகிறது.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
September 27, 2025
Ramkumar Kaliamurthy
September 9, 2025
Vijayalakshmi Balasubramaniyan
August 6, 2025