ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 20, 2024
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 20, 2024

HomeFact Checkதீபாவளிக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு என்று பரவும் செய்தி உண்மையா?

தீபாவளிக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு என்று பரவும் செய்தி உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: தீபாவளிக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.

தீபாவளிக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு என்று செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு” என்று இந்த புகைப்படச்செய்தி பரவுகிறது.

Screenshot from Facebook/Manikandan

Facebook Link/Archived Link

Screenshot from X @RevenueTn9512

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தவெக மாநாடு பந்தல் கால் நடும் நிகழ்ச்சிக்கு மது அருந்திவிட்டு வந்தாரா புஸ்ஸி ஆனந்த்?

Fact Check/Verification

தீபாவளிக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு என்று பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகிய புகைப்படம் புதியதலைமுறை பெயரில் பரவிய நிலையில் அதனை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அப்போது, கடந்த செப்டம்பர் 28, 2022 அன்று வெளியாகியிருந்த அவர்களுடைய வீடியோ செய்தியில் தற்போது வைரலாகும் அதே ஃப்ரேம் இடம்பெற்றிருந்தது.

எனவே, இதுதொடர்பாக புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு பேசியபோது அவர், “இது எங்களுடைய பழைய செய்தி. இதில் இடம்பெற்றிருக்கும் வடிவமைப்பு முறையை நாங்கள் இப்போது உபயோகிப்பது இல்லை. 2022ஆம் ஆண்டு செய்தியை தற்போது பரப்பி வருகின்றனர்” என்று விளக்கமளித்தார். எனினும், தீபாவளியை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வதாக இதுவரை அதிகார்ப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு… வைரலாகும் படத்தின் உண்மை பின்னணி!

Conclusion

தீபாவளிக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு என்று பரவும் செய்தி கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
YouTube Video From, Puthiyathalaimurai, Dated September 28, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular