Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் ₹480 கோடி வைப்பு நிதியை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
Fact: ₹41.9 கோடி வைப்பு நிதி அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது; பறிமுதல் செய்யப்படவில்லை.
தமிழ்நட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இச்சோதனைகளில் ₹480 கோடி வைப்பு நிதியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததாக கூறி நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: Fact Check: இளம்பெண்ணுடன் நடனமாடிய பாதிரியார் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் ₹480 கோடி வைப்பு நிதியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நடக்கும் சோதனை குறித்து அமலாக்கத்துறை சார்பில் என்ன தெரிவிக்கப்பட்டது என அறிய அமலாக்கத்துறையின் டிவிட்டர் பக்கத்தில் ஆராய்ந்தோம்.
இதில் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணி தொடர்புடைய ஏழு இடங்களில் சோதனை நடைப்பெற்றதாகவும், இச்சோதனையில் ₹81.7 இலட்சம் ரொக்கம், ₹13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ₹41.9 கோடி வைப்பு நிதி முடக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இதனடிப்படையில் காண்கையில் பொன்முடி தொடர்புடைய இடங்களில் ₹480 கோடி வைப்பு நிதி பறிமுதல் செய்யப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பது தெளிவானது.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.41.9 கோடி வைப்புத்தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி நியூஸ்கார்ட் ஒன்றை புதிய தலைமுறை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.
Also Read: சந்திரயான்-3 வெற்றிக்கு கடவுள் வெங்கடாசலபதியே காரணம் என்றாரா நாராயணன் திருப்பதி?
அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் ₹480 கோடி வைப்பு நிதியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Tweet from @dir_ed, Dated July 18, 2023
Tweet from Puthiya Thalaimurai, Dated July 18, 2023
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)