Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவதூறு
Fact: வைரலாகும் வீடியோவில் உண்மையில் அவர் ஓ.பன்னீர்செல்வம் குறித்தே பேசியிருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவதூறாக பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”#RSS ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்னு தளவாய் சுந்தரம் மேல உடனே நடவடிக்கை எடுத்த எடப்பாடி!
#இப்டி பகிரங்கமாக பேசிய உதயகுமார் மேல இன்னும் நடவடிக்கை எடுக்கல!இதுல எடப்பாடி எனும் ஆளுமைனு டேக் வேற ஓட்டுறானுங்க!” என்றும், வேறு சில பதிவுகளுடனும் இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: துண்டு சீட்டு இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன் என்று கூறினாரா ஆளுநர்?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவதூறாக பேசியதாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோ குறித்த உண்மையறிய அவர் உண்மையிலேயே என்ன பேசியிருந்தார் என்பதை ஆராய்ந்தோம். ராஜபாளையத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய உதயகுமார், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார்.
அந்த வீடியோவை வெளியிட்டு ””அம்மா, புரட்சித் தலைவர் ஜெயித்த ஆண்டிப்பட்டி தொகுதியில் இரட்டை இலை தோற்கிறது என்றால் நீங்கள் வேட்டி கட்டலாமா?..”ராஜபாளையத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக தாக்கிப் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்” என்று செய்தி வெளியிட்டிருந்தது சன் நியூஸ்.
அவர் பேசிய நிகழ்வின் வீடியோவை அவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசினார் என்பதாக நியூஸ் 18 தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது என்று வைரல் வீடியோ பரவும் நிலையில், அதுகுறித்து நியூஸ் 18 தமிழ் ஆசிரியர் கார்த்திகைச்செல்வனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அது போலியானது” என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து, இன்று வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ 21 ஆம் தேதி ராஜபாளையத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒ.பி.எஸ் குறித்து நான் பேசியதை இ.பி.எஸ் குறித்து பேசியதாக சமூக வலைதளத்தில் போலியாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி பெயரில் திரித்து வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து உள்ளோம்.” என்று இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
அஇஅதிமுக தொழில்நுட்ப அணி தரப்பிலிருந்து வைரலாகும் இந்த வீடியோ போலியானது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது குரிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவதூறாக பேசியதாகப் பரவும் செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
X post from, Sun News Tamil, Dated October 21, 2024
YouTube Video from, News 18 Tamil Nadu, Dated October 24, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 16, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 14, 2025
Vijayalakshmi Balasubramaniyan
March 27, 2025