Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் இஸ்லாமிய நாடுகளின் கொடியுடன் ஊர்வலம் சென்றது.
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் ஊர்வலம் காங்கிரஸ் கட்சியின் ஊர்வலமல்ல. அதேபோல் அந்த ஊர்வலம் ஹரியானாவிலும் நடக்கவில்லை. இந்த ஊர்வலம் மகராஷ்டிராவில் நடந்த மிலாடி நபி ஊர்வலமாகும்.
ஹரியானாவில் காங்கிரஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது பாகிஸ்தான், துருக்கி மற்றும் பாலஸ்தீன நாடுகளின் கொடியுடன் ஊர்வலம் சென்றதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெக மாநாடு பந்தல் கால் நடும் நிகழ்ச்சிக்கு மது அருந்திவிட்டு வந்தாரா புஸ்ஸி ஆனந்த்?
ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் இஸ்லாமிய நாடுகளின் கொடியுடன் ஊர்வலம் சென்றதாக பரவும் வீடியோவை கூர்ந்து கவனிக்கையில் அந்த ஊர்வலத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடி ஒன்று கூட இடம்பெற்றிருக்கவில்லை.
மேலும் அவ்வீடியோவில் காணப்பட்ட போலீஸ் வாகனத்தில் மகாராஷ்டிரா போலீஸின் அடையாளச் சின்னம் இடம்பெற்றிருப்பதையும், போலீஸ் இருசக்கர வாகனம் ஒன்றில் ‘போலீஸ்’ என்று மராத்தியில் எழுதப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.
தொடர்ந்து ஆராய்கையில் MH 24 என்ற பதிவெண்ணையுடைய வாகனங்கள் வீடியோவில் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. இந்த பதிவெண்ணானது மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டத்தின் பதிவெண்ணாகும்.
இதனையடுத்து ஆராய்கையில் வைரலாகும் வீடியோவில் ‘லாத்தூர் ஆதி தக்ஷிதா’ மருத்துவமனை என்று ஒரு கட்டிடத்தின் மேல் எழுதப்பட்டிருந்ததை காண முடிந்தது. அந்த மருத்துவமனை குறித்து கூகுள் மேப்பில் தேடுகையில் அம்மருத்துவமனையானது மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்தி சோவ்க் பகுதியில் அமைந்துள்ளது என அறிய முடிந்தது.
தொடர்ந்து கூகுள் ஸ்ட்ரீட் வியூவ் வசதியை பயன்படுத்தி அம்மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்டு, அவற்றை வைரலாகும் வீடியோவில் காணப்படும் பகுதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டும் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்தி காந்தி சோவ்க் பகுதிதான் என உறுதியானது.
இதனையடுத்து லாத்தூர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளராக பணிபுரியும் அஷ்ஃபக் பதான் என்பவரை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு, இந்த ஊர்வலம் குறித்த தகவல்களை விசாரித்தோம். அவர், “இந்த ஊர்வலமானது லாத்தூரில் ஒவ்வொரு வருடமும் மிலாடி நபி தினத்தில் நடைபெறும். இந்த ஊர்வலம் லாத்தூரின் சூஃபியா மசூதியில் தொடங்கி ஷாஹு சோவ்க் வர செல்லும்” என்று தெரிவித்தார்.
இவரையடுத்து லாத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்பிரகாஷ் மரோத்ராவ் மக்கோடேவை தொடர்புக் கொண்டு பேசுகையில், “இந்த ஊர்வலமானது செப்டம்பர் 19 ஆம் தேதி மிலாடி நபி தினத்தை முன்னிட்டு நடைப்பெற்றது. லாத்தூரில் விநாயகர் ஊர்வலமும் மிலாடி நபி ஊர்வலமும் ஒரே நேரத்தில் நடக்கக்கூடாது என்ற சமூக உடன்படிக்கை உள்ளது. இதன்படி இந்து மக்களும் இஸ்லாமிய மக்களும் தனித்தனி நாட்களில் ஊர்வலம் நடத்துவதாக ஒவ்வொரு வருடமும் முடிவு செய்வர். இவ்வருடம் விநாயகர் ஊர்வலம் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைப்பெற்றது. இதை தொடர்ந்து மிலாடி நபி ஊர்வலம் செப்டம்பர் 19 ஆம் தேதி நடைப்பெற்றது” என்று அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து இவ்வருடம் நடந்த லாத்தூர் மிலாடிநபி ஊர்வலம் குறித்து இணையத்தில் தேடினோம். இத்தேடலில் இதுத்தொடர்பான பல வீடியோக்கள் நமக்கு கிடைத்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
அவ்வீடியோக்களில் ஊர்வலத்தின் முன் காரில் தேசியக் கொடியை ஏந்தியபடி வரும் நபர் வைரலாகும் வீடியோவிலும் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் ஊர்வலம் லாத்தூர் மிலாடி நபி ஊர்வலம்தான என உறுதியாகின்றது.
Also Read: முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு… வைரலாகும் படத்தின் உண்மை பின்னணி!
ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் இஸ்லாமிய நாடுகளின் கொடியுடன் ஊர்வலம் சென்றதாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் ஊர்வலம் காங்கிரஸ் கட்சியின் ஊர்வலமல்ல. அதேபோல் அந்த ஊர்வலம் ஹரியானாவிலும் நடக்கவில்லை. இந்த ஊர்வலம் மகராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டத்தில் நடந்த மிலாடி நபி ஊர்வலமாகும்.
இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Google Maps
Phonic Conversation with Journalist from Latur, Ashfaq Pathan.
Phonic Conversation with Latur Police.
Social Media Posts.
இந்த செய்தியானது நியூஸ்செக்கர் இந்தியில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 19, 2025
Ramkumar Kaliamurthy
June 18, 2025
Ramkumar Kaliamurthy
June 12, 2025