எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு புதிதாக 3 வேளாண் சட்டங்களை கடந்த ஆண்டு (செப்டபர் 27, 2020) அமலுக்கு கொண்டு வந்தது. இச்சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு வருடங்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (19/11/2021) குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற இருப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் பிரதமரின் இந்த முடிவுக்க தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்ததாக நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் அந்த நியூஸ்கார்டில், “போராட்டங்களுக்கு பயந்து பின்வாங்கியது சரியல்ல; மத்திய அரசு வேளாண் சட்டங்களை ராணுவக் கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்திருக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



Also Read: மதிமுக கலைக்கப்பட்டு திமுகவுடன் இணைக்கப்படும் என்றாரா வைகோ?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடந்து இந்த தகவல் உண்மையானதா என ஆய்வு செய்தோம்.
அந்த ஆய்வில் வைரலாகும் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என நமக்கு தெரிய வந்தது. உண்மையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரதமர் மோடியின் இந்த முடிவுக்கு ஆதரவே தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்,
“வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றமைக்கும்,குறைந்தப்பட்ச ஆதார விலை (MSP) நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படும் என அறிவித்தமைக்கும் எனது நன்றிகளை மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.”
என்று பிரதமரின் முடிவுக்கு ஆதரவாக டிவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக பரவும் தகவல் தவறானது என உறுதியாகியப்பின், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் நியூஸ்கார்டை உண்மையிலேயே நியூஸ் 7 தமிழ் பிரசுரித்ததா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் பிரசுரித்ததற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜ் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம்.
இதற்கு அவர்,
“இது போலியான நியூஸ்கார்ட், இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் பிரசுரிக்கவில்லை.”
என்று விளக்கமளித்தார்.
Also Read: நாம் தமிழர் கட்சி தம்பிகள் பொங்கல் பரிசை வாங்க மாட்டார்கள் என்று சீமான் கூறினாரா?
Conclusion
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Sugitha Sarangaraj, Digital Head, News 7 Tamil
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)