Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: தங்கர்பச்சான் போட்டியிட மறுப்பு! தன்னிடம் கேட்காமலே அறிவித்துள்ளார்கள்.கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும். ஜூனியர் விகடன் பெயரில் தவறாக பரவுகிறது.
கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்று இயக்குநர் தங்கர்பச்சான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகிறது.
”தங்கர்பச்சான் போட்டியிட மறுப்பு! தன்னிடம் கேட்காமலே அறிவித்துள்ளார்கள்.கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.” என்று இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமானவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டாரா?
கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்று இயக்குநர் தங்கர்பச்சான் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் ஜூனியர் விகடன் பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அதில், “கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளராக இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். அரக்கோணத்தில் வழக்கறிஞர் பாலு, திண்டுக்கல்லில் திலகபாமா உள்ளிட்டோரை வேட்பாளர்களாக அறிவித்திருக்கிறது பாமக!” என்கிற செய்தியே வெளியாகியிருந்தது.
எனவே, இதுதொடர்பாக ஜூனியர் விகடன் துணை ஆசிரியர் பிரிட்டோவைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது; அதை நாங்கள் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார்.
மேலும், இதுகுறித்து தங்கர்பச்சானும், “கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்! – தங்கர் பச்சான்” என்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
Also Read: பிரதமர் மோடியை விமர்சித்ததால் சுட்டுக்கொல்லப்பட்ட மணிப்பூர் சிறுமி என்று பரவும் மியான்மர் வீடியோ!
கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்று இயக்குநர் தங்கர்பச்சான் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Facebook Post From, Thankarbachan, Dated March 22, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)