வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact CheckFact Check: அண்ணாமலைதான் சிறந்த ஆளுமை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாகப்...

Fact Check: அண்ணாமலைதான் சிறந்த ஆளுமை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
அண்ணாமலைதான் சிறந்த ஆளுமை- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

Fact
வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும். அவர் அவ்வாறு அண்ணாமலையை புகழ்ந்து பேசியிருக்கவில்லை.

அண்ணாமலைதான் சிறந்த ஆளுமை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அண்ணாமலை

“அண்ணாமலைதான் சிறந்த ஆளுமை. சசிகலா காலில் விழுந்த எடப்பாடி இன்று என்னை போன்ற மூத்த நிர்வாகிகள் அவரின் காலில் விழ வேண்டும் என வற்புறுத்துகிறார். அண்ணாமலை அவர்கள் அழைத்தால் நான் தொண்டர்களுடன் பாஜக செல்ல தயார்” என்று அவர் கூறியதாக நியூஸ்கார்ட் பரவுகிறது.

அண்ணாமலை
Screenshot from Twitter @ThangaM54345464
Screenshot from Facebook/A L Sathish Kumar

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராகுல் காந்தி தனது பெயரில் காந்தியை நீக்கி ‘ராகுல் ராஜீவ் ஃபெரோஸ்’ என குறிப்பிட்டதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

Fact Check / Verification

அண்ணாமலைதான் சிறந்த ஆளுமை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

செல்லூர் ராஜூ சமீபத்தில் கருத்து ஏதேனும் தெரிவித்திருக்கிறாரா என்று பார்த்தபோது, “திராவிடக்கட்சிகளை தாண்டி தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் வளராது. அண்ணாமலைக்கு வாய் அடக்கம் தேவை; பாஜகவினரை இழுத்து அதிமுக வளர வேண்டிய அவசியமில்லை” என்று அவர் பேசியிருந்தார். பாஜக நிர்வாகிகள் பலரும் அதிமுகவில் இணைந்த சர்ச்சையைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இந்நிலையில், அந்த நியூஸ்கார்டையே எடிட் செய்து தற்போது பரப்பி வருகின்றனர் என்பது நமக்கு உறுதியாகியது.

original News Card
Edited News Card

புதியதலைமுறை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ”வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக வடிவமைக்கப்பட்டது” என்று விளக்கமளித்துள்ளது.

Also Read: Fact Check: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் என்று தவறாக கடிதத்தில் குறிப்பிட்டாரா? உண்மை என்ன?

Conclusion

அண்ணாமலைதான் சிறந்த ஆளுமை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post From, Puthiyathalaimurai, Dated March 09, 2023
Facebook Post From, Puthiyathalaimurai, Dated March 09, 2023


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular