வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact CheckFact Check: ஆருத்ரா நிதி நிறுவனத்தில் அண்ணாமலைக்கு 100 கோடி ரூபாய் பங்கு என்று பரவும்...

Fact Check: ஆருத்ரா நிதி நிறுவனத்தில் அண்ணாமலைக்கு 100 கோடி ரூபாய் பங்கு என்று பரவும் போலி நியூஸ்கார்டுகள்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

ஆருத்ரா நிதி நிறுவனத்தில் அண்ணாமலைக்கு 100 கோடி ரூபாய் பங்கு இருப்பதாக புதியதலைமுறை, ஜூனியர் விகடன் மற்றும் தினமலர் பெயரில் நியூஸ்கார்டுகள் பரவி வருகின்றன.

“ஆருத்ரா நிதி நிறுவன மோசடி; பாஜக தலைவர் அண்ணாமலை ரூ.100 கோடி பணம் பெற்றதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. அண்ணாமலை 100 கோடி பெற்றது உண்மை; பகீர் கிளப்பும் நாராயணன் திருப்பதி” என்பதாக இந்த நியூஸ்கார்டுகள் பரவி வருகின்றன.

Screenshot From Facebook/deccanroartn
Screenshot From Facebook/Rgs Bala
Screenshot From Facebook/Naqrasimman

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: பிரபாகரன் இறந்த இடத்திலிருந்த மண்ணை எடுத்து வைத்துள்ளேன் என்றாரா சீமான்?

Fact Check / Verification

ஆருத்ரா நிதி நிறுவனத்தில் அண்ணாமலைக்கு 100 கோடி ரூபாய் பங்கு என்று பரவும் நியூஸ்கார்டுகள் சமூகவலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு செய்தோம்.

புதியதலைமுறை பெயரில் வெளியாகிய நியூஸ்கார்ட் குறித்து அதன் டிஜிட்டல் பிரிவைச் சேர்ந்த இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது; புதியதலைமுறை அதை வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார். தொடர்ந்து, அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்திலும் ”வைரல் நியூஸ்கார்ட் போலியானது” என்று பதிவிட்டார்.

தொடர்ந்து, தினமலர் பெயரில் பரவிய நியூஸ்கார்ட் குறித்து தினமலர் பத்திரிக்கையாளர் தண்டபாணியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இந்த நியூஸ்கார்டினை நாங்கள் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார்.

மேலும், ஜூனியர் விகடன் தரப்பில் அதன் டிஜிட்டல் பிரிவு ஆசிரியர் பிரிட்டோவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஜுனியர் விகடன் பெயரில் இந்த நியூஸ்கார்ட் போலியாக வடிவமைக்கப்பட்டது” என்று உறுதிப்படுத்தினார்.

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிடிஆர்.நிர்மல் குமார் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ”இந்த செய்தி போலியானது” என்று பதிவிட்டுள்ளார். நாராயணன் திருப்பதியும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இச்செய்தி போலியானது என்று விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆருத்ரா நிதி நிறுவனம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது என்பது கடந்த வருடம் செய்திகளில் வெளியாகியிருந்தது.

Also Read: Fact Check: அண்ணாமலை பேசிய வீடியோவின் எடிட் செய்யப்பட்ட பகுதியைப் பகிர்ந்த தொல்.திருமாவளவன்!

Conclusion

ஆருத்ரா நிதி நிறுவனத்தில் அண்ணாமலைக்கு 100 கோடி ரூபாய் பங்கு என்று பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவை என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post From, Puthiyathalaimurai, Dated February 27, 2023

Phone Conversation With, Ivani, Puthiyathalaimurai, Dated February 27. 2023
Phone Conversation with, Britto, Junior Vikatan, Dated February 27, 2023
Phone Conversation With, Dhandapani, Dinamalar, Dated February 27, 2023
Twitter Post From, CTR.Nirmal Kumar, Dated February 27, 2023
Twitter Post From, Narayanan Tirupathi, Dated February 27, 2023


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular