வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact CheckFact Check: பிரபாகரன் இறந்த இடத்திலிருந்த மண்ணை எடுத்து வைத்துள்ளேன் என்றாரா சீமான்?

Fact Check: பிரபாகரன் இறந்த இடத்திலிருந்த மண்ணை எடுத்து வைத்துள்ளேன் என்றாரா சீமான்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பிரபாகரன் இறந்த இடத்திலிருந்த மண்ணை எடுத்து வைத்துள்ளேன் என்று சீமான் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“பிரபாகரன் இறந்து கிடந்த இடத்தில் இரத்தம் சிந்திய மண் ஒரு வெண்கல செம்பில் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்துள்ளேன்” என்று சீமான் கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளத்தளங்களில் பகிர்ந்து இதே கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

பிரபாகரன் இறந்த இடத்திலிருந்த மண்ணை சேமித்து வைத்துள்ளேன் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல்
Screengrab from Twitter@AravindRajaOff
பிரபாகரன் இறந்து கிடந்த இடத்திலிருந்த மண்ணை சேமித்து வைத்துள்ளேன் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல்
Screengrab from Twitter@viswadmk2
பிரபாகரன் இறந்து கிடந்த இடத்திலிருந்த மண்ணை சேமித்து வைத்துள்ளேன் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல்
Screengrab from Facebook/DravidianDmk

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: அண்ணாமலை பேசிய வீடியோவின் எடிட் செய்யப்பட்ட பகுதியைப் பகிர்ந்த தொல்.திருமாவளவன்!

Factcheck / Verification

பிரபாகரன் இறந்த இடத்திலிருந்த மண்ணை சேமித்து வைத்துள்ளேன் என்று சீமான் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் இத்தகவல்  சீமான் பேசிய பொதுக்கூட்ட வீடியோவை அடிப்படையாக வைத்தே பரப்பப்படுவதால் அந்த வீடியோவில் சீமான் பேசியவற்றை கூர்ந்து கவனித்தோம். அவ்வீடியோவில் எந்த ஒரு இடத்திலும் பிரபாகரன் இறந்து இடத்தில் என்கிற வார்த்தைகளை சீமான் பேசி இருக்கவில்லை.  

உண்மையில் அவ்வீடியோவில், “…சிந்திய ரத்தம், அந்த மண், சிவந்த மண், என் வீட்டு பூஜை அறையில் இன்றும் இருக்கின்றது. ஒரு வெண்கல கலயத்தில் சேமித்து வைத்துள்ளேன்…” என்றே சீமான் பேசியுள்ளார்.

தொடக்கமில்லாமல் இடையிலிருந்த ஆரம்பிக்கும் இவ்வீடியோவை அடிப்படையாக வைத்தே, பிரபாகரன் இறந்து கிடந்த இடத்திலிருந்த மண்ணை சேமித்து வைத்துள்ளேன் என்று சீமான் பேசியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

ஆகவே  இவ்வீடியோவில் காணப்படும் வாசகத்தின் தொடக்க வார்த்தைகளை அறிய, இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து தேடினோம்.

இத்தேடலில்சீமான் எழுச்சியுரை | ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்’ என்று தலைப்பிட்டு பிப்ரவரி 14, 2023 அன்று நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வைரலாகும் வீடியோவின் முழுப்பகுதி பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இந்த வீடியோவின் 18 நிமிடம் 52-ஆவது நொடியில், என் இன மக்கள், என் தாய் நிலம் தமிழினத்தில் சிந்திய ரத்தம், அந்த மண், சிவந்த மண், என் வீட்டு பூஜை அறையில் இன்றும் இருக்கின்றது. ஒரு வெண்கல கலயத்தில் சேமித்து வைத்துள்ளேன்…” என்று சீமான் பேசியிருப்பதை காண முடிந்தது.

இதனடிப்படையில் காண்கையில் பிரபாகரன் இறந்து கிடந்த இடத்திலிருந்த மண்ணை சேமித்து வைத்துள்ளேன் என்று சீமான் பேசவில்லை என்பதும், இலங்கை தமிழ்மக்கள் இறந்து கிடந்த இடத்திலிருந்த மண்ணை சேமித்து வைத்துள்ளேன் என்றே சீமான் பேசியுள்ளார் என்பதும் தெளிவாகின்றது.

Also Read: Fact Check: ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்தாரா திமுக பிரமுகர்?

Conclusion

பிரபாகரன் இறந்த இடத்திலிருந்த மண்ணை சேமித்து வைத்துள்ளேன் என்று சீமான் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Sources

Youtube Post from Naam Thamizhar Katchi Dated February 14, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular