Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: பெஞ்சல் புயலில் மக்கள் தவிக்கும்போது ஈபிஎஸ் திருமண விருந்தில் கலந்துக்கொண்டார்.
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் படம் அண்மையில் எடுக்கப்பட்டதல்ல. சென்ற மாதம் எடுக்கப்பட்டதாகும்.
பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் புதுச்சேரி மற்றும் புதுச்சேரியை ஒட்டிய விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை கவனிக்காமல் திருமண விருந்தில் கலந்துக்கொண்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. திமுக மாணவர் அணியின் தலைவர் ராஜீவ் காந்தி உட்பட பலரும் இத்தகவலை பரப்பி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மெரினா சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் என்று பரவும் வீடியோ உண்மையா?
பெஞ்சல் புயலில் மக்கள் தவிக்கும்போது ஈபிஎஸ் திருமண விருந்தில் கலந்துக்கொண்டதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்
அதில் ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் வைரலாகும் இப்படம் சென்ற மாதம் ஏழாம் தேதி (நவம்பர் 07) எடுக்கப்பட்டதாக தெளிவுப்படுத்தி பதிவு ஒன்றை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. வைரலாகும் படத்தில் அவரும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தேடுகையில் அதிமுக ஐடி விங்கின் செயலாளர் ராஜ் சத்யனும் இப்படம் நவம்பர் 07 ஆம் தேதி எடுக்கப்பட்டதாக உறுதி செய்து பதிவு ஒன்றை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
தொடர்ந்து இந்த தவறான தகவலை பதிவிட்ட திமுக ராஜீவ் காந்திக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இதுபோன்ற தகவலை மீண்டும் பதிவிட்டால் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்றும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Also Read: டீ, சமோசா தரவில்லை என்று அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா; வைரலாகும் நியூஸ்கார்டு உண்மையானதா?
பெஞ்சல் புயலில் மக்கள் தவிக்கும்போது ஈபிஎஸ் திருமண விருந்தில் கலந்துக்கொண்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். வைரலாகும் படம் சென்ற மாதம் எடுக்கப்பட்டதாகும்; அண்மையில் எடுக்கப்பட்டதல்ல.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Facebook post from P.V.Kathiravan, Tamil Nadu State General Secretary, All India Forward Bloc Party, Dated December 01, 2024
X post from Raj Satyan, Secretary, AIADMK IT Wing, Dated December 01, 2024
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Ramkumar Kaliamurthy
January 17, 2025
Ramkumar Kaliamurthy
January 10, 2025
Ramkumar Kaliamurthy
December 2, 2024