வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkராமர் கோயில் கட்டுவதற்கு நிதி தராததால் பாஜகவினர் கடைகளை சூறையாடினார்களா?

ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி தராததால் பாஜகவினர் கடைகளை சூறையாடினார்களா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி தராததால் பாஜகவினர் கடைகளை சூறையாடியதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி தராததால் பாஜகவினர் கடைகளை சூறையாடியதாக வீடியோ வைரல்

29 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அவ்வீடியோவில் சிலர் கடைகளில் புகுந்து அங்கிருக்கும் லட்டுகளை தெருவில் வீசி எறிகின்றனர்.

இவ்வீடியோவில் லட்டுகளை வீசி எறிபவர்கள் பாஜகவினர் என்றும், ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி தராததால் அவர்கள் இவ்வாறு செய்கின்றனர் என்றும் கூறி இவ்வீடியோ பரப்பப்படுகின்றது.

ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி தராததால் பாஜகவினர் கடைகளை சூறையாடியதாக வீடியோ வைரல் - 1

Facebook Link | Archive Link

ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி தராததால் பாஜகவினர் கடைகளை சூறையாடியதாக வீடியோ வைரல் - 2

Facebook Link | Archive Link

ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி தராததால் பாஜகவினர் கடைகளை சூறையாடியதாக வீடியோ வைரல் - 3

Facebook Link | Archive Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ரவிவர்மா ஓவியம் என்று நடிகை சுப்ரமணியபுரம் சுவாதியின் புகைப்படம் வைரல்!

Fact Check/Verification

ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி தராததால் பாஜகவினர் கடைகளை சூறையாடியதாக வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து  இதுக்குறித்து தேடினோம்.

நம் தேடலில் இச்சம்பவம்  உத்திரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் நடைப்பெற்றது என்பதை  அறிய முடிந்தது. ஆனால் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடுவதுபோல் இச்சம்பவத்திற்கும் பாஜகவுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. அதேபோல்  இதற்கும் ராமர் கோயிலுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. 

உண்மை
Source: News 18 Hindi

அயோத்தியில் உள்ள அனுமான் கோவில் ஒன்றில் லட்டு பிரசாதமாக அளிக்கப்பட்டு வந்துள்ளது. பிரசாதமாக அளிக்கப்படும் லட்டுகள் தரக்குறைவாக இருந்ததால் பிரசாதம் விற்பவர்களுக்கும் அக்கோயிலைச் சார்ந்த சாதுக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி சாதுக்கள் பிரசாதம் விற்பவர்களின் கடைகளிலிருந்த லட்டுகளை எடுத்து வீதியில் கொட்டியுள்ளனர்.

Courtesy: India Ahead

இந்த சம்பவமே ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி தராததால் பாஜகவினர் கடைகளை சூறையாடியதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.

Also Read: புதுச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் ரோல்ஸ் ராய்ஸ் காரை பயன்படுத்துகிறாரா விஜய்? உண்மை என்ன?

Conclusion

ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி தராததால் பாஜகவினர் கடைகளை சூறையாடியதாக கூறி வைரலாகும்  வீடியோவில் காணப்படும் சம்பவம், அயோத்தி அனுமான் கோயிலில் பிரசாதம் விற்பவர்களுக்கும் சாதுக்களுக்கும் இடையே பிரச்சனை தோன்றியபோது ஏற்பட்டதாகும்.

இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

India Ahead: https://www.youtube.com/watch?v=PKi9_hb7l8o

News 18 Hindi: https://hindi.news18.com/news/uttar-pradesh/ayodhya-controversy-over-low-quality-offering-prasad-in-hanumangarhi-saints-threw-laddus-on-road-viral-photo-cgpg-3639718.html


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular