வியாழக்கிழமை, செப்டம்பர் 26, 2024
வியாழக்கிழமை, செப்டம்பர் 26, 2024

HomeFact Checkவிநாயகர் ஊர்வலத்தை தடுத்து, சிலையை கைது செய்தனரா கர்நாடக போலீஸ்?

விநாயகர் ஊர்வலத்தை தடுத்து, சிலையை கைது செய்தனரா கர்நாடக போலீஸ்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: விநாயகர் ஊர்வலத்தை தடுத்து, விநாயகர் சிலையை கைது செய்து போலீஸ் வேனில் வைத்த கர்நாடகா போலீஸ்.

Fact: இத்தகவல் தவறானதாகும். நாகமங்களாவில் நடந்த கலவரம் தொடர்பாக இந்து அமைப்புகள் விநாயகர் சிலையுடன் பெங்களூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து அச்சிலை காப்பாற்றப்பட்டு போலீஸ் வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்பு அந்த சிலை உரிய சடங்குகளுடன் அதிகாரிகளால் கரைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் விநாயகர் ஊர்வலத்தை தடுத்து விநாயகர் சிலையை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் வைத்தாக தகவல் ஒன்று புகைப்படங்களுடன் பரவி வருகின்றது.

விநாயகர் ஊர்வலத்தை தடுத்து, விநாயகர் சிலையை கைது செய்து போலீஸ் வேனில் வைத்த கர்நாடகா போலீஸ்.

X Link | Archive Link

விநாயகர் ஊர்வலத்தை தடுத்து, விநாயகர் சிலையை கைது செய்து போலீஸ் வேனில் வைத்த கர்நாடகா போலீஸ்.

Archive Link

விநாயகர் ஊர்வலத்தை தடுத்து, விநாயகர் சிலையை கைது செய்து போலீஸ் வேனில் வைத்த கர்நாடகா போலீஸ்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்தியதாக பரவும் தவறான படம்!

Fact Check/Verification

கர்நாடக போலீஸ் விநாயகர் ஊர்வலத்தை தடுத்து, விநாயகர் சிலையை கைது செய்து போலீஸ் வேனில் வைத்ததாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் இம்மாதம் 11 ஆம் தேதி கர்நாடக மாநிலம் நாகமங்களாவில் நடந்த கலவரம் குறித்த செய்தி ஏஎன்ஐயில் வெளிவந்திருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் நாகமங்களாவில் விநாயகர் சிலை கறைப்பு நிகழ்ச்சிக்கு ஊர்வலம் சென்றபோது இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு மிகப்பெரிய கலவரம் நடந்ததாகவும், இக்கலவரத்தில் 25க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிறையானதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும்  இச்சம்பவத்தில் தொடர்புடைய 52 பேரை போலீசார் கைது செய்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து வைரலாகும் படங்கள் குறித்து தேடுகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ‘How did Ganesha idol end up in police van?’ என்று தலைப்பிட்டு வைரலாகும் படம் குறித்து செப்டம்பர் 13, 2024 அன்று செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

விநாயகர் ஊர்வலத்தை தடுத்து, விநாயகர் சிலையை கைது செய்து போலீஸ் வேனில் வைத்த கர்நாடகா போலீஸ்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்த தகவல்

நாகமங்களாவில் நடந்த கலவரத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்று கூறி பெங்களூர் டவுன் ஹால் பகுதியில் அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம் நடந்ததாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் விநாயகர் சிலையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ததாகவும், இந்த கைது நடவடிக்கையில் விநாயகர் சிலைக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாமல் இருக்க விநாயகர் சிலையை போலீசார் காப்பாற்றி அவர்களது வாகனத்தில் வைத்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் நியூஸ்18 ஊடகத்திலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. “போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது விநாயகர் சிலை தரையில் கிடப்பதை கண்டனர். உடனே எங்கள் அதிகாரி ஒருவர் அச்சிலையை காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்தார்” என்று பெங்களூர் போலீஸ் கமிஷ்னர் தயானந்த் நியூஸ்18-க்கு கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விநாயகர் ஊர்வலத்தை தடுத்து, விநாயகர் சிலையை கைது செய்து போலீஸ் வேனில் வைத்த கர்நாடகா போலீஸ்.
நியூஸ்18யில் வெளிவந்த தகவல்

தொடர்ந்து தேடுகையில் பெங்களூர் துணை போலீஸ் கமிஷ்னர் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் தகவல் குறித்து விளக்கம் அளித்து பதிவு ஒன்று பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

அப்பதிவில் நாகமங்களாவில் நடந்த கலவரம் தொடர்பாக இந்து அமைப்புகள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பெங்களூர் டவுன்ஹால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களை போலீசார் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட விநாயகர் சிலை உரிய சடங்குகளுடன் அதிகாரிகளால் கரைக்கப்பட்டதாகவும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

 Also Read: மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருக்கின்றாரா?

Conclusion

கர்நாடக போலீஸ் விநாயகர் ஊர்வலத்தை தடுத்து, விநாயகர் சிலையை கைது செய்து போலீஸ் வேனில் வைத்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

நாகமங்களாவில் நடந்த கலவரம் தொடர்பாக இந்து அமைப்புகள் விநாயகர் சிலையுடன் பெங்களூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து அச்சிலை காப்பாற்றப்பட்டு போலீஸ் வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்பு அந்த சிலை உரிய சடங்குகளுடன் அதிகாரிகளால் கரைக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Report By ANI, Dated September 12, 2024
Report By TOI, Dated September 13, 2024
Report By News18, Dated September 14, 2024
X post By Deputy Commissioner of Police, Central Division, Bengaluru City, September 15, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular