வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkஇந்திராகாந்தி கணவர் மற்றும் மாமனாருடன் இருப்பதாக பரவும் படம்!

இந்திராகாந்தி கணவர் மற்றும் மாமனாருடன் இருப்பதாக பரவும் படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மறைந்த பாரதப் பிரதமர் இந்திராகாந்தி கணவர் மற்றும் மாமானாருடன் இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்திராகாந்தி கணவர் மற்றும் மாமானாருடன் இருப்பதாக கூறி பரவும் புகைப்படம்

வைரலாகும் புகைப்படத்தில் இந்திராகாந்தியுடன் அவருடைய தந்தையும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியுமான ஜவஹர்லால் நேருவும் உள்ளார். இவர்களுடன் வேறு இரு ஆண்களும் உள்ளனர். இவ்விருவரில் ஒருவர் இந்திராகாந்தியின் கணவர் என்றும் அவர் பெயர் ஃபிரோஸ் கான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொருவர் பெயர் யூனூஸ் கான் என்றும் அவர் இந்திராவின் மாமனார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து இந்திராகாந்தியின் மதம் குறித்தும், பெயர் குறித்தும் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

இந்திராகாந்தி கணவர் மற்றும் மாமானாருடன் இருப்பதாக கூறி பரவும் புகைப்படம் - 1

Facebook Link

இந்திராகாந்தி கணவர் மற்றும் மாமானாருடன் இருப்பதாக கூறி பரவும் புகைப்படம் - 2

Facebook Link

இந்திராகாந்தி கணவர் மற்றும் மாமானாருடன் இருப்பதாக கூறி பரவும் புகைப்படம் - 3

Facebook Link

Also Read: ஹெச்.ராஜா தலைமறைவு என்று பரவும் நியூஸ்கார்டுகள் உண்மையானதா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

இந்திராகாந்தி கணவர் மற்றும் மாமானாருடன் இருப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படத்தின் உண்மை பின்னணி குறித்து அறிய, அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். இதில் வைரலாகும் படம் அலாமி இணையத்தளத்தில்  இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது.

இந்திராகாந்தி கணவர் மற்றும் மாமானாருடன் இருப்பதாக கூறி பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை - 1
Source: Alamy (Screenshot)

வைரலாகும் புகைப்படத்தில் காணப்படும் இருவரும் உண்மையில் இந்திராவின் கணவரும் மாமானாரும் அல்ல. இந்திராவின் மாமனார் யூனூஸ் கான் என்று குறிப்பிடப்பட்டுள்ள நபரின் உண்மையான பெயர் நிக்கோலஸ் ரியோரிச் ஆகும். இவர் ரஷ்ய நாட்டைச் சார்ந்த ஓவியராவார்.

இந்திராகாந்தி கணவர் மற்றும் மாமானாருடன் இருப்பதாக கூறி பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை - 2

அதேபோல் படத்தில் இந்திராவின் கணவர் என்று குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு நபரின் பெயர் ஃபெரோஸ் கான் அல்ல, அவர் பெயரே யூனுஸ் கானாகும். இவர் இந்திய வர்த்தக ஆணையத்தின் தலைவராகவும், இந்திரா காந்திக்கு நம்பிக்கையானவராகவும் விளங்கியுள்ளார்.

இந்திராகாந்தி கணவர் மற்றும் மாமானாருடன் இருப்பதாக கூறி பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை - 3

Also Read: முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தமிழ்நாட்டில் இந்த ரேஷன் கட்டுப்பாடுகளை அறிவித்ததா?

Conclusion

இந்திராகாந்தி கணவர் மற்றும் மாமானாருடன் இருப்பதாக கூறி வைரலாகும் புகைப்படத்தில் காணப்படுபவர்கள் உண்மையில் இந்திராகாந்தியின் கணவரும் மாமனாரும் இல்லை என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

Alamy.com

Roerich.Org

Times Content.Com


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular