Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
குடியரசு தினத்தன்று விவசாயப் பேரணியில் ஏற்பட்ட கலவரத்திற்கு பாஜகவினர்தான் காரணமென்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
புதிய வேளாண் சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி இந்தியக் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர்.
மிகவும் அமைதியாக தொடங்கிய இப்பேரணி ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. இக்கலவரத்தில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இக்கலவரத்திற்கு காரணம் விவசாயிகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள், சமூக விரோதிகள் என பலர் மீது குற்றம் சுமத்தி பல விதமான வதந்திகள், அனுமானங்கள் சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகின்றது.
இந்த வரிசையில் தற்போது பாஜகவினர்தான் இந்தக் கலவத்திற்கு காரணம் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இப்புகைப்படத்தை பலரும் பகிர்ந்து, தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Archive Link: https://archive.vn/QjoNC
rchive Link: https://archive.vn/QB7RY
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படம் உண்மையில் குடியரசு தினத்தன்று நடைப்பெற்ற கலவரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்தானா என்பதை அறிய இதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் நடந்த கலவரத்திற்கு பாஜகவினர்தான் காரணமென்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
பரப்பப்படும் இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மைக குறித்து அறிய இப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
அவ்வாறு செய்ததில் இப்புகைப்படம் 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
கடந்த 2014 ஆண்டு உத்திரப் பிரதேச தலைநகர் லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியை எதிர்த்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையே தற்போது குடியரசு தினத்தில் நடந்த கலவரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
குடியரசு தினத்தன்று நடந்த கலவரத்திற்கு பாஜகவினர்தான் காரணம் என்று கூறி பரப்பப்படும் புகைப்படம் 2014 ஆம் ஆண்டு லக்னோவில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Facebook Profile: https://www.facebook.com/thamizhpolitics/posts/788655321762194
Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=2485802885060820&id=100008933974593
One India: https://www.oneindia.com/lucknow/bjp-workers-stage-protest-against-sp-rule-in-lucknow-1474481.html
Facebook Profile: https://www.facebook.com/groups/390298761313877/permalink/1378579125819164/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
November 20, 2021
Ramkumar Kaliamurthy
November 22, 2021
Ramkumar Kaliamurthy
February 5, 2021