Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்திய தலைநகர் டெல்லியில் நடக்கும் டெல்லி சலோ போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய தலைநகர் டெல்லியில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, டெல்லி சலோ எனும் போராட்டத்தை கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
பஞ்சாபிலிருந்து டெல்லி நோக்கி, டிராக்டர்களில் அணி அணியாக வந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். விவசாயிகளைத் தடுத்த நிறுத்த கண்ணீர் புகையுடன் தடியடியும் நடத்தப்பட்டது.
ஆயினும் விவசாயிகள் டெல்லியின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பலரும் இப்போராட்டம் குறித்த தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்போது, இப்போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஒரு புகைப்படமும் பகிரப்பட்டு வருகிறது.
பல்லாயிரக் கணக்கான மக்கள் சாலையில் அமர்ந்து போராடுமாறு இருக்கும் இப்புகைப்படமானது, உண்மையிலேயே டெல்லி சலோ போராட்டத்தில் எடுக்கப்பட்டதுதானா என்பதை அறிய இப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்தோம்.
டெல்லி சலோ போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படம், உண்மையில் டெல்லி சலோ போராட்டத்தில் எடுக்கப்பட்டதல்ல.
தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம், ஏற்கனவே வேறொரு போராட்டத்துடன் தொடர்புப் படுத்தி பகிரப்பட்டது. அப்போதே இப்புகைப்படம் குறித்து முழுமையாக ஆராய்ந்து, இப்புகைப்படம் குறித்த உண்மைத்தன்மையை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் விளக்கியிருந்தோம்.
அக்கட்டுரையைப் படிக்க: வேளாண் மசோதாக்களை எதிர்த்து கூடிய கூட்டமா இது?
உண்மையில் இப்புகைப்பாடமானது 2018 ஆம் ஆண்டு நடைப்பெற்ற விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டப் புகைப்படமாகும். மும்பை லைவ் எனும் ஊடகம் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தது. அப்புகைப்படத்தையே தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வாசகர்களின் புரிதலுக்காக வைரலானப் புகைப்படத்தையும், மும்பை லைவ் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டப் புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படமானது, டெல்லி சலோ போராட்டத்தில் எடுக்கப்பட்டதல்ல என்பதையும், அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாசிக்கிலிருந்து மும்பைக்கு விவசாயிகள் நடைப்பயணப் போராட்டம் செய்தபோது எடுக்கப்பட்டது என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Twitter Profile: https://twitter.com/vasantalic/status/1333052734610624513
Twitter Profile: https://twitter.com/eahamedfarookt1/status/1333070044901769217
Mumbai Live: https://twitter.com/MumbaiLiveNews/status/972515680414289920
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
March 6, 2024
Ishwarachandra B G
February 27, 2024
Vasudha Beri
February 26, 2024