அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக முன்னெடுத்துள்ள போராட்டம் நியாயமானதே என்று திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள மைக்கேல்பட்டி என்கிற ஊரில் செயல்பட்டு வருகின்ற பள்ளி விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இம்மரணத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நிலவி வருகின்ற நிலையில் பாஜக குறிப்பிட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த எம்.பி ஜெகத்ரட்சகன், “கட்டாய மதமாற்றத்தால் பலியான மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு பாஜக முன்னெடுத்த போராட்டம் நியாயமானதே. என் முழு ஆதரவு பாஜகவின் போராட்டத்திற்கு உண்டு ”என்று தெரிவித்ததாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நீங்கள் தமிழர் என்றால் உங்கள் குடி என்ன என்று ராகுல் காந்தியை நோக்கி கேள்வி எழுப்பினாரா சீமான்?
Fact Check/Verification
அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்கும் பாஜகவின் போராட்டம் நியாயமானது என்று திமுக எம்.பி எஸ்.ஜெகத்ரட்சகன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ் கார்டு பாலிமர் டிவி பெயரில் பரவுவதால், பாலிமர் டிஜிட்டல் பிரிவைத் தொடர்பு கொண்டோம். அப்போது, பாலிமர் டிஜிட்டல் குழுவைச் சேர்ந்த மாணிக்கம் என்கிற செய்தியாளர் குறிப்பிட்ட நியூஸ்கார்டு போலியானது என்று நமக்கு உறுதி செய்தார்.
மேலும், எம்.பி ஜெகத்ரட்சகனே தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்ட செய்தி போலியானது என்று பதிவிட்டுள்ளார்.
Conclusion
அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்கும் பாஜகவின் போராட்டம் நியாயமானது என்று திமுக எம்.பி எஸ்.ஜெகத்ரட்சகன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
Polimer Digital
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)