Friday, March 14, 2025
தமிழ்

Fact Check

தமிழ்நாட்டைத் தாண்டி தமிழில் பேசி கட்டணக் கழிப்பறையைக் கூட பயன்படுத்த முடியாது என்றாரா அண்ணாமலை?

banner_image

Claim

image

தமிழ்நாட்டைத் தாண்டினால் தமிழில் பேசி கட்டணக் கழிப்பறையைக் கூட பயன்படுத்தமுடியாது - அண்ணாமலை

Fact

image

வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டு பரவுகிறது.

தமிழ்நாட்டைத் தாண்டி தமிழில் பேசி கட்டணக் கழிப்பறையைக் கூட பயன்படுத்த முடியாது என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”இந்திதான் இந்தியாவின் மூத்தமொழி. இந்தி தெரியாதவர்கள் இந்தியர்களே அல்ல. தமிழ்நாட்டைத் தாண்டினால் தமிழில் பேசி கட்டணக் கழிப்பறையைக் கூட பயன்படுத்தமுடியாது” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.

Screenshot from X @shanmugamchin10

X Link/Archived Link

Screenshot from X @SJB56856832

X Link/Archived Link

Screenshot from X @kirthikatharan

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.    

Also Read: நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனா காலமானார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check/Verification

தமிழ்நாட்டைத் தாண்டி தமிழில் பேசி கட்டணக் கழிப்பறையைக் கூட பயன்படுத்த முடியாது என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் தினமலர் பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். ஆனால், அதில் இதுபோன்ற நியூஸ்கார்ட் ஏதும் இடம்பெற்றிருக்கவில்லை.

ஆனால், கடந்த டிசம்பர் 26, 2024 அன்று ”அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி பெயர், முகவரி விபரங்களுடன் முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டது சட்டவிரோதம்: பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை” என்று நியூஸ்கார்ட் ஒன்று வெளியாகியிருந்தது. வைரலாகும் நியூஸ்கார்டும் இந்த நியூஸ்கார்டும் ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் புகைப்படத்துடன் இருப்பதை நம்மால் காண முடிந்தது.

எனவே, தினமலர் ஊடகவியலாளர் தண்டபாணியிடம் இந்த வைரல் நியூஸ்கார்ட் குறித்து கேட்டபோது, “தமிழ் குறித்து அண்ணாமலை பேசியதாக பரவும் இந்த நியூஸ்கார்ட் போலியானது; நாங்கள் இதை வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார்.

தொடர்ந்து, பாஜக தரப்பில் அக்கட்சியைச் சேர்ந்த எஸ்.ஜி.சூர்யாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ”வைரலாகும் செய்தி போலியானது” என்று தெளிவுபடுத்தினார்.

Also Read: உ.பி.யில் குழந்தைப்பேறு பெறுவதற்காக பெண் ஒருவரை கை, கால்களை கட்டிபோட்டு சாக்கடையில் படுக்க வைத்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?

Conclusion

தமிழ்நாட்டைத் தாண்டி தமிழில் பேசி கட்டணக் கழிப்பறையைக் கூட பயன்படுத்த முடியாது என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.  

Sources
Facebook Post From, Dinamalar, Dated December 26, 2024
Phone Conversation With, SG Surya, BJP, Dated February 17, 2025

RESULT
imageAltered Photo/Video
image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.